வெள்ளிக்கிழமை இப்படி சுவாமி கும்பிட்டால் பல தலைமுறைக்கு உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வாழும்.

- Advertisement -

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி மகாலட்சுமிக்கு வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்வார்கள். அந்த வழிபாட்டு முறைகளில் இன்று நாம் பார்க்கப்போவது செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கக்கூடிய மகாலட்சுமி வழிபாடு. எல்லா வழிபாடும் செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கத்தான் செய்யும்.

இருந்தாலும் இந்த முறைப்படி வழிபாடு செய்தால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய பணக்கஷ்டங்களுக்கு எல்லாம் உடனடியாக விமோசனம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகள் கூட செல்வ செழிப்போடு வாழ்வாங்கு வாழும் என்று சொல்லப்பட்டுள்ளது. செல்வ செழிப்பை அள்ளிக் கொடுக்கும் அந்த மகாலட்சுமி பூஜையை வெள்ளிக்கிழமை வீட்டில் எப்படி செய்வது. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள் வாருங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை செய்யும் முறை

இதற்கு நீங்கள் முதலில் 108 சங்குகள் வாங்க வேண்டும். சின்ன சின்னதாக பால் சங்குகள் என்று கேட்டால் கிடைக்கும். பூஜைக்கு அந்த சங்கு கட்டாயம் தேவை. வாங்கி வந்த சங்குகளை முதலில் சுத்தமான தண்ணீரில் அலசி விடுங்கள். நிறைய தண்ணீரில் கொஞ்சமாக பசும்பால் விட்டு அந்த தண்ணீரில் இந்த சங்குகளை எல்லாம் ஒரு முறை போட்டு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெள்ளிக்கிழமை வழக்கம் போல உங்கள் வீட்டில் பூஜை அறையை அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சிறிய பித்தளை சொம்பு எடுத்துக்கோங்க. இந்த சங்கை தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சங்காக எடுத்து அந்த பித்தளை சொம்பில் போட வேண்டும்.

- Advertisement -

அப்போது உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் மந்திரத்தை சொல்லலாம். ஏதாவது ஒரு வரி மந்திரம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் மகாலட்சுமியின் போற்றிகள் இருக்கிறது, அந்த போற்றிகள் சொல்லலாம். மந்திரம் சொல்வது உங்களுடைய விருப்பம் தான். ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை கூட உச்சரிக்கலாம்.

108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த சங்கை எல்லாம் அந்த பித்தளை சொம்பில் போட்டு மகாலட்சுமியின் பாதங்களில் வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். (அதாவது வெண்சங்கால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்கிறீர்கள் அவ்வளவுதான்). 4 டைமண்ட் கற்கண்டுகளை நெய்வேதியமாக வைத்தால் கூட போதும்.

- Advertisement -

பூஜை செய்துவிட்டு வெள்ளிக்கிழமை அந்த சங்கு, பூஜை அறையில் இருக்கட்டும். மற்ற நாட்களில் சங்கை எடுத்து பத்திரப்படுத்தி ஒரு டப்பாவில் போட்டு வேறு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மேல் சொன்ன மகாலட்சுமி சங்கு பூஜையை செய்து வந்தால் உங்கள் வீட்டில் வறுமை நிச்சயம் இருக்காது. செல்வ செழிப்பு உங்கள் குடும்பத்தில் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

சங்கை பற்றிய இன்னும் சில தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சில பேர் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த வலம்புரி சங்கில் சில பேர் பால் ஊற்றி வழிபாடு செய்வார்கள். சில பேர் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்வார்கள். பூஜை அறையில் வெறும் சங்காக வைக்க மாட்டாங்க.

அந்த வலம்புரி சங்கில் பால் ஊற்றி வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் பொன் பொருள் ஆபரண சேர்க்கை இருக்கும். அந்த சங்கில் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: பணவரவு அதிகரிக்க துளசி செடியில் நாணயத்தை வைத்து இப்படி பூஜை செய்யுங்கள். பணம் பலவழிகளில் வரும்.

இந்த வலம்புரி சங்கில் ஊற்றி வைத்திருக்கும் தீர்த்தத்தை எடுத்து வீடு முழுவதும் தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த அரிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -