அந்த காலத்து ஆன்ட்டி ஏஜிங் கிரீம்! முகத்துக்கு மட்டும் எந்த கிரீமும் பயன்படுத்தாமல் இதை தடவினால் போதும் என்றுமே நம் தோல் சுருங்காமல் இளமையுடன் இருக்குமா என்ன?

face-skin-maavu
- Advertisement -

அந்த காலத்தில் எந்த செயற்கையான கிரீம், பவுடர் மற்றும் முக பூச்சுகள் எதுவும் இருந்தது கிடையாது, ஆனாலும் அவர்கள் எவ்வளவு வயதானாலும் இளமையுடன் இருந்தார்கள். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நம் பெற்றோர்களை விட, அவர்களுடைய பெற்றோர்கள் திடகாத்திரமாகவும், இளமையுடன் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அவர்கள் இயற்கை முறையை அதிக அளவு நம்பியது தான் அதற்கு காரணமாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் நம் தோல் சுருக்கம் இல்லாமல் எவ்வளவு வயதானாலும் இளமையுடன் இருக்க இயற்கை ஆன்ட்டி ஏஜிங் கிரீமாக இருப்பது என்ன? என்பது போன்ற பயனுள்ள அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்.

ஆன்ட்டி ஏஜிங் கிரீம் பொதுவாக இளம் வயதிலேயே வயதான முதிர்ந்த தோற்றம் உடையவர்கள் பயன்படுத்தும் க்ரீமாக இருந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் நாம் உண்ணும் உணவு, சருமத்திற்கு கொடுக்கும் பராமரிப்பு போன்றவையும் இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றத்தை கொடுத்து விடுகிறது. இதிலிருந்து மீள செயற்கையை நாடி செல்லாமல், கண்ட கண்ட கிரீம் வகைகளை பயன்படுத்தாமல் அந்த காலத்து டெக்னிக்கை ரொம்ப சுலபமாக கையாண்டால் எளிதாக நிவாரணம் காணலாம்.

- Advertisement -

சம அளவு பயத்தம் பருப்பு மாவு மற்றும் கடலை பருப்பு கடலை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரெண்டு மாவையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் கடையிலிருந்து மாவாக வாங்காமல், பருப்புகளாக வாங்கி வந்து லேசாக குறைந்த தீயில் வைத்து வாணலியில் போட்டு வறுத்து எடுத்து ஆற வைத்து, பின்னர் மிஷினில் கொடுத்து அரைத்து வந்தாலே போதும். ரெண்டு பருப்பு மாவுகளையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எப்பொழுதெல்லாம் முகத்தை கழுவ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்பொழுது ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த மாவை எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு தயிர் சேர்த்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீமை பயன்படுத்தி நீங்கள் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். அவ்வளவுதான், தினமும் இது போல நீங்கள் சோப்பு, கிரீம் எதுவும் உங்களுடைய முகத்திற்கு பயன்படுத்தாமல் மாவை மட்டுமே பயன்படுத்தி கழுவி வந்தால் நாளடைவில் உங்களுடைய முகம் சுருக்கங்கள் இன்றி, இயற்கையான முறையில் இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

- Advertisement -

மேலும் உங்களுடைய சருமத்தை இருக செய்து, ஹைட்ரேஷன் ஆக்கி, ஆன்ட்டி ஏஜிங்காக செயல்படுகிறது. உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு விஷயமாகவும் நிச்சயம் இது இருக்கும். ரிங்கல்ஸ், டார்க் சர்க்கிள்ஸ் போன்றவற்றையும் இது விரட்டி அடிக்கும். முகத்தில் ஆங்காங்கே திட்டுக்கள் இருப்பதையும் இது மறைய செய்து விடும். முகத்திற்கு நல்ல ஒரு மாய்ஸ்ரைசராக செயல்படும். இதை இரவு முழுவதும் முகத்தில் தடவி ஊற விட்டுவிட்டு பின்னர் காலையில் எழுந்து மசாஜ் செய்தபடி கழுவி கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
இடுப்புக்கு கீழே முடி வளரவே இல்லையா? அடர்த்தி குறைவா இருக்கா? அப்படின்னா நம்ம பாட்டி சொல்லிக் கொடுத்த முறையிலே தேங்காய் எண்ணெயை இப்படி தடவி பாருங்க! உங்க முடியும் அடர்த்தியா கால் முட்டியை தாண்டி கண்டிப்பாக வளரும்.

இதன் மூலம் முகத்தில் தோன்றக்கூடிய பருக்களும் தடுக்கப்படும். ப்ளீச்சிங், கிளிசரின், வேக்சிங், மாய்ஸ்ரைசிங் என்று எல்லா வகையிலும் இது செயல்பட்டு முதிர்வு தன்மையை விரட்டி அடித்து, என்றுமே இளமையுடன் இருப்பதற்கு உதவி புரிகிறது. எனவே இனியும் காசை வீணடிக்காமல், நம் பாட்டி காலத்து டெக்னிக்கை பயன்படுத்தி அவர்களைப் போலவே இளமையுடன் பல்லாண்டு இருக்கலாமே!

- Advertisement -