10 பைசா செலவில்லாமல் 10 நாளிலேயே உங்க முகம் பட்டு போல மிருதுவாக மாற இதை செய்தால் போதுமே!

skin-face-pack
- Advertisement -

பத்து நாளில் உங்க முகத்தில் இருக்கக் கூடிய மாசு, மருக்களை அகற்றி, சரும பிரச்சனைகள் அனைத்தையும் போக்கி ரொம்பவே பட்டுப் போல மிருதுவாக மாற்றிக் கொடுக்கக் கூடிய சக்தி இந்த பொருட்களுக்கு உண்டு. இவை எளிதாக வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். இதை வைத்து எப்படி நம்ம முகத்தை எந்த செயற்கை ரசாயனங்களும் கலக்காமல் இயற்கையாகவே சுத்தம் செய்வது? பொலிவாக்குவது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு ரகசியங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் முகத்தை சுத்தம் செய்ய எவ்வளவோ விஷயங்களை நாம் செய்து பார்த்திருப்போம். இயற்கையான முறையில் நம் சருமத்தை பராமரிக்கும் போது தான் இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும். செயற்கையை கையாண்டால் அது அப்போதைக்கு நல்ல ஒரு தோற்றத்தை தருமே தவிர, அதனால் பக்க விளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

- Advertisement -

இயற்கையான அழகு என்பது இயற்கையான பொருட்களில் இருந்து தான் கிடைக்கிறது. நம் வீட்டில் இருக்கக்கூடிய காய்கறி ரசங்கள், பழ ரசங்கள் இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது சிறிதளவு முகத்திற்கு தடவி பேக் போட்டு வந்தாலே முகத்தில் இருக்கக்கூடிய சருமத்திற்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும். முக பராமரிப்பு என்பது இவ்வளவே! ஆனால் இதை யாரும் மெனக்கட்டு செய்வது கிடையாது.

இழந்த பொலிவை மீட்டு மீண்டும் நம்ம முகத்தை குழந்தை போல மிருதுவாக மாற்றுவதற்கு உங்களிடம் பயன்படுத்தப்படாத கிரீன் டீ பாக்கெட்டுகள் இருந்தால் போதும். இந்த கிரீன் டீயில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஏராளம், நம் சரும பராமரிப்பதற்கு உதவுகிறது. தினமும் கிரீன் டீ குடிப்பதனால் முகம் இளமையாக இருக்கவும் உதவுகிறது. இது உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை அகற்றி, உடலை சுத்தமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நல்ல ஒரு பானமாக இருக்கிறது.

- Advertisement -

கிரீன் டீயில் இருக்கக்கூடிய நான்கு பேக்குகளை எடுத்து பிரித்து ஒரு மிக்ஸர் ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன், ஒரு 50 கிராம் அளவிற்கு முல்தானிமட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் நன்கு கலந்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய பவுலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த பவுடரை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் வேப்பிலை சாறு தேவையான அளவிற்கு கலந்து வேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். வேப்பிலையை பிரஷ்ஷாக பறித்து உரலில் இட்டு லேசாக நீர் விட்டு நசுக்கினால் சாறு எளிதாக கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே:
என்ன செய்தாலும் தலையை விட்டு பேன் போகமாட்டேன் என்கிறதா? இத ட்ரை பண்ணி பாருங்க ஒரு பேன் கூட உங்க தலையில் இனி இருக்கவே செய்யாது!

இந்த பேஸ்டை நீங்கள் முகம் முழுவதும் தடவி நன்கு உலர விட்டுவிட வேண்டும். இருபதிலிருந்து அரை மணி நேரம் நன்கு உலர விட்டால் முகம் இறுகிவிடும். அதன் பிறகு நீங்கள் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் போதும், முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்கி, முக துவாரங்களுக்குள் இருக்கக்கூடிய அழுக்குகள், கிருமிகள் அனைத்தையும் அகற்றி முகத்தை ரொம்பவே பளிச்சென்று பொலிவாக வைத்துக் கொள்ளும். இயற்கையான இந்த பொருட்களை பயன்படுத்தி தினமும் கூட இந்த பேக் நீங்கள் போட்டுக் கொள்ளலாம். இதனுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ளுங்கள், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் போட்டு பாருங்கள். உங்களுடைய முகம் கண்ணாடி போல ஜொலிப்பது உறுதி!

- Advertisement -