நம்மையெல்லாம் ஆட்டி வைக்கும் நவகிரகங்கள் ஒவ்வொன்றும், நம்மைப் பார்த்து வணங்க தொடங்கிவிடும். தினமும் இந்த 1 பொருளை வீட்டிற்குள் கொண்டு வந்தால்.

vinayagar-navagragam
- Advertisement -

நம் வாழ்க்கையில் நல்லது கெட்டதை நிர்ணயிப்பது இந்த நவகிரகங்கள் தான். நவ கிரகங்கள், கோள்களாக இந்த பிரபஞ்சத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நவகிரகங்கள் கடவுளின் சேவகர்கள். நீங்கள் செய்யக்கூடிய நல்லது கெட்டதுக்கு இணங்க, நவகிரகங்களை ஜாதக கட்டத்தில் அமர வைக்கும் வேலையை அந்த இறைவன் செய்கின்றான். ஆக நவகிரகங்களால் நமக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று எந்த கிரகங்கள் பெயர்ச்சி ஆனாலும், அதன் மூலம் வரக்கூடிய பாதிப்புகள் நமக்கு பெரியதாக தாக்கத்தை கொடுக்கக் கூடாது.

அதேபோல சனி திசை, குரு திசை, ராகு கேது திசையில் பிரச்சனைகளை சமாளிக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் நவகிரகங்கள் எல்லாம், நம்மைப் பார்த்து வணங்கும் அளவிற்கு, அதிசக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தார்கள். சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள அரிய பரிகாரங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு மிக எளிமையான பரிகாரம். தினமும் இதை செய்து வந்தால் நீங்கள் நவகிரகங்களை கண்டு பயப்படவே வேண்டாம். நவகிரகங்கள் எல்லாம் உங்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும். அவ்வளவு அற்புதம் வாய்ந்த ஆன்மீக சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக.

நவகிரக தோஷம் நீங்க அருகம்புல் பரிகாரம்:
முழுமுதற் கடவுளான பிள்ளையாரை வணங்கத் தொடங்கி விட்டால், உங்களுக்கு வாழ்க்கையில் எந்த தடைகளும் பிரச்சனையும் இருக்காது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அந்த விநாயகருக்கு உரிய பொருள்தான் அருகம்புல்.

- Advertisement -

தினமும் உங்களுடைய வீட்டிற்குள் பச்சை பசேலென இருக்கும் அருகம்புல்லை கொண்டு வரவேண்டும். வீட்டிற்குள் அருகம்புல் வந்து விட்டால், வீட்டில் இருக்கும் பீடை தரித்திரம் அனைத்தும் வீட்டை விட்டு வெளியே சென்று விடும். கூடவே கஷ்டமும் வெளியே சென்று விடும்.

நன்றாக விஷயம் தெரிந்தவர்கள் பிள்ளையாரை வணங்காமல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்க மாட்டார்கள். ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அந்த மஞ்சள் பிள்ளையார் தலைக்கு மேலே அருகம்புல்லை வைத்து விட்டால் போதும். அருகம்புல்லுக்கு பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய நேர்மறை சக்தியை நான்கு பக்கத்தில் இருந்தும் ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு.

- Advertisement -

அதனால்தான் விநாயகருக்கு இந்த அருகம்புல்லை வைத்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். கெட்டதே நடக்க வேண்டும் என்று இருந்தாலும், அருகம்புல்லை அந்த இடத்தில் வைத்து விட்டால், அந்த இடத்தில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரித்து விடும். தானாக நமக்கு நன்மை நடக்கும்.

தினமும் வரவேற்பறையில் சின்ன டம்ளருக்குள் இந்த அருகம்புல்லை வேர்ப்பகுதி கீழே இருக்கும் படி போட்டு விடுங்கள். அருகம்புல் ஆகாயத்தை பார்த்தபடி பறந்து விரிந்து இருக்கும். நான்கு பக்கத்தில் இருந்தும், எட்டுத்திக்கிலிருந்து வரக்கூடிய நேர்மறை ஆற்றலை ஈர்த்து உங்களுடைய வீட்டில் தங்க வைத்துவிடும். கூடவே விநாயகரை நினைத்துக் கொள்ளுங்கள். நவகிரக தோஷம் மட்டுமல்ல மற்ற எந்த கெடுதலும் உங்கள் பக்கம் நெருங்காமல் இந்த அருகம்புல் ஒன்றே பார்த்துக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே: பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமெனில், செவ்வாய்க்கிழமையில் இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

இத்தனை நாட்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. தினமும் ஒரு கொத்து அருகம்புல்லை கொண்டு வந்து வீட்டிற்குள் வையுங்கள். அந்த அருகம்புல் காய்ந்தவுடன் அதை கால்படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் அதே பாத்திரத்தில் அருகம்புல்லை வைத்து பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

- Advertisement -