நம்மையும் நம் வீட்டையும் தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்.

kaval dheivam
- Advertisement -

தீய சக்திகளிடம் இருந்து நம்மை காப்பாற்ற நமக்கு காவலாக ஒன்று இருக்க வேண்டும். அது கண்ணுக்குத் தெரிந்த தெரியாத தீய சக்திகள் எதுவாக இருந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு நமக்கு காவலாக ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம்மையும் நம் வீட்டையும் பாதுகாக்க கூடிய காவலர்களாக இருக்க வேண்டிய பொருட்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக ஊர் எல்லைகளில் காவல் தெய்வம் என்று தெய்வம் இருக்கும். இந்த தெய்வம் தான் அந்த ஊரையே பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் கோவில்களிலும் நுழைவாயிலில் துவார பாலகர்கள் மற்றும் கால பைரவர் போன்ற காவல் தெய்வங்கள் இருப்பார்கள். இவை அனைத்திற்கும் முதன்மையான காரணமாக திகழ்வது தீய சக்திகள் எதுவும் உள்ளே நுழையக்கூடாது என்பது மட்டும்தான். இதே போல் தான் நாம் நம்முடைய வீட்டிற்கு காவல் வைத்திருந்தால் அந்த காவல் நமக்கு வரவேண்டிய தீய சக்திகளில் இருந்து நம்மை காப்பாற்றும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் தினமும் செய்யலாம் அல்லது வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் தான் தேவைப்படுகிறது. அவை பச்சை அரிசியும், மிளகும். பச்சை அரிசியை சிறிது மஞ்சள் கலந்து அச்சதை அரிசி போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சிறிய தட்டு அல்லது கிண்ணம் அல்லது உபயோகப்படுத்தாத சிறிய அகல் விளக்காக இருந்தாலும் பரவாயில்லை இரண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் சிறிதளவு மஞ்சள் கலந்த பச்சை அரிசியை போட வேண்டும். அதனுடன் மூன்று மிளகையும் போட்டு நம்முடைய வீட்டின் வாசலில் அதாவது தெருவாசலில் இருக்கக்கூடிய கதவிற்கு உள்புறமாக இரண்டு பக்கங்களிலும் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது கால பைரவரே போற்றி என்று கூறியவாறு வைக்க வேண்டும். இந்த அரிசியை அங்கு இருக்கும் எரும்புகளும் சாப்பிடலாம். அதனால் எந்த தவறும் இல்லை.

- Advertisement -

தினமும் இதை மாற்றினால் நமக்கு பாதுகாப்பாக கால பைரவர் அங்கு நின்று நம்மையும் நம் வீட்டையும் தீய சக்திகளில் இருந்து காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. தினமும் நம்மால் செய்ய இயலாத பட்சத்தில் வாரத்திற்கு ஒரு முறையாக வெள்ளிக்கிழமை அன்று மட்டுமாவது இதை நாம் செய்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திடீர் பணவரவை ஏற்படுத்தும் கொத்துமல்லி பரிகாரம்

கண்ணுக்கு தெரிந்த தீய சக்திகளை நம்மால் எளிதில் விரட்டி விட முடியும். ஆனால் கண்ணுக்கு தெரியாத பல சக்திகள் நம்மை சுற்றி உலாவி வருகிறது அல்லவா? அதை நீக்குவதற்கு இந்த பரிகாரத்தை செய்து காலபைரவரின் துணையோடு தீய சக்திகள் நம் வீட்டிற்குள் வராமல் விரட்டியடிக்க முடியும்.

- Advertisement -