இவ்வளவு நீளமா முடி வளர நீங்க என்ன பண்றீங்க, இப்படி எல்லோரும் உங்களை ஆச்சர்யமா கேட்க வேண்டுமா? அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ். உங்க முடி மேஜிக் பண்ண மாதிரி வளரும் பாருங்க

- Advertisement -

நல்ல நீளமான கரு கூந்தல் மீண்டும் என்பது இன்றைய பல பெண்களின் கனவு தான். உண்மையிலே இது வெறும் கனவாக தான் இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலும் பெண்கள் நீளமான முடிகளை வளர்ப்பதில்லை, அப்படியே வளர்க்க நினைத்தாலும், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இனி நீளமாக முடி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த முறையை பின்பற்றலாம்.

தலைமுடி நீளமாக வளர்ப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது கொஞ்சம் சிரத்தையாக முடியை பராமரித்தால் போதும் நல்ல நீளமான கருகரு கூந்தலை வளர்த்துக் கொள்ளலாம். இதற்கு பொதுவான ஒரு சில குறிப்புகள். தலைமுடியை எப்பொழுதும் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். தலை வாரும் போது முடியில் சிக்கு இல்லாமல் வாரிய பிறகு தான் முடியை பின்ன வேண்டும். தலை முடி ஈரத்துடன் இருக்கும் போது பின்ன கூடாது, காய வைத்த பின்பு தான் தலைமுடியை பின்ன வேண்டும். இவையெல்லாம் முடி நன்றாக வளரவும், முடி உதிராமல் இருக்கவும் பொடுகு தொல்லை வராமல் இருக்கவும் இந்த முறைகளை தொடர்ந்து கடைபிடித்தாலே ஓரளவிற்கு முடி சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகி விடும்.

- Advertisement -

இப்போது தலை முடி வளர பயன்படுத்தும் இந்த எண்ணையை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். தலைமுடி நீளமாக வளர நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறை தான் இது.

இதற்கு இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகம் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடர் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடராக அரைத்து, ஒரு பவுலில் இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு 200 கிராம் சுத்தமான தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும் அதையும் தனியாக எடுத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தேங்காய் எண்ணெயில் அரைத்த கருஞ்சீரகம், வெந்திய பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கும் போது நீங்கள் கலந்து வைத்த இந்த தேங்காய் எண்ணெய் கலந்து கிண்ணத்தை அப்படியே உள்ளே வைத்து (டபுள் பாயில் முறை) லேசாக சூடு படுத்தி கொள்ளுங்கள்.

இப்படி செய்த பிறகு இந்த எண்ணெயை வடி கட்டி பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது அப்படியே ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த எண்ணையை ஒரு சிறிய பஞ்சில் தொட்டு உங்கள் முடியின் வேர்களில் படும்படி தடவி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனி உங்க வயதை நீங்களே சொன்ன கூட யாரும் நம்ப முடியாத அளவு இளமையா மாற இதோ சூப்பர் டிப்ஸ். இளமையா இருக்கணும்னு நினைச்சா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

அரை மணி நேரம் கழித்து சீயக்காய் அல்லது மைல்டான ஷாம்பு சேர்த்து உங்கள் தலை முடியை அலசி விடுங்கள். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தாலே போதும் உங்கள் வேர்க்கால்கள் எல்லாம் வலுவாகி புதிய முடிகள் முளைத்து முடி கொட்டுவதும் நின்று விடும்.வளரும் முடிகள் அனைத்தும் நல்ல கருகருவென்று நீளமாகவே வளரும், அது மட்டும் இன்றி பொடுகு தொல்லையும் இருக்காது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -