உங்கள் வீட்டின் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் தவறாமல் வைத்துப் பாருங்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்

dharpai
- Advertisement -

ஆசை இல்லாத மனிதன் என்று எவரையும் சொல்ல முடியாது. சாதாரண மனிதன் முதல் ஞானி வரை அனைவருக்கும் பலதரப்பட்ட ஆசைகள் இருக்கின்றன. மனிதனாகப் பிறந்தவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், பிடித்த வேலை கிடைக்க வேண்டும், அழகான மனைவி கிடைக்க வேண்டும், நல்ல குடும்பம் கிடைக்கவேண்டும், கார் வாங்கவேண்டும், வீடு வாங்க வேண்டும் இவ்வாறு அவனது ஆசைகள் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றனவே தவிர இதற்கு அளவீடுகள் என்று கிடையவே கிடையாது. ஆனால் அவன் நினைக்கும் ஆசைகள் அனைத்தும் வெற்றி அடைகிறதா என்று சிந்தித்துப் பார்த்தால் அவை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. முடிந்தவரை முயற்சித்து அதில் பல தடைகள் வர அதனை மறந்தும் விடுகிறான். இவ்வாறு தடைபட்டுக் கொண்டிருக்கும் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற உங்கள் வீட்டின் பூஜை அறையில் இருக்க வேண்டிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

car

ஒரு சிலருக்கு தான் ஆசைப்படாத பல விஷயங்கள் தனது பெற்றோர்கள் மூலம் கிடைத்து விடும். ஆனால் தனக்கென ஒரு ஆசை இருந்து அதனை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் பொழுது அதற்கு பல தடைகள் வந்து கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு தங்கள் குடும்பத்தை இனிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவுகள், பண பற்றாகுறை போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

இதற்கு காரணம் நமது இல்லத்தில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருப்பதேயாகும். நம்மை சுற்றி இருக்கும் இந்த எதிர்வினைகளை அழித்து நாம் இருக்கும் இடத்தை பவித்திரமாக மாற்றினால் தான் நமக்கான நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். அவ்வாறு நீரை சுத்தம் சுத்தப்படுத்த கூடியதும், விஷத்தையும் அழிக்கின்ற தன்மை கொண்ட தர்ப்பை புல்லை தான் நமது வீட்டில் வைத்திருக்க வேண்டும்.

dharpai-grass

கிரகணம் வருகின்ற நாட்களில் உப்பு சேர்த்து சமைக்கின்ற உணவுப் பொருட்களில் இந்த தர்ப்பைப் புல்லை போட்டு வைக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இதற்கு காரணம் அது அந்த உணவு விஷமாக மாறுவதை தவிர்த்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹோமம் செய்யும் பொழுதும்9 பித்ருக்களுக்கான தர்பனை செய்யும் பொழுதும் இந்த தர்ப்பைப் புல்லை மோதிரமாக மாற்றி விரலில் மாட்டி விடுவார்கள். இதற்கு காரணம் அந்த பூஜை பவித்திரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகத் தான்.

- Advertisement -

இவ்வாறு அனைத்தையும் பவித்ரமாக மாற்றும் திறன் தர்ப்பைப் புல்லுக்கு இருக்கிறது. தர்ப்பைப்புல்லின் அடிப்பாகத்தில் பிரம்மனும், நடுவில் திருமாளும், நுனியில் சிவனும் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவு புனிதமான இந்த தர்ப்பைப் புல்லை ஒரு கட்டு எடுத்துக் கொண்டு, அதனை ஒரு கயிறு போட்டுக் கட்டி, இந்த தர்ப்பைப் புல் கட்டை பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

sivan

இவ்வாறு செய்வதால் எதிர்மறை சக்திகள் அனைத்தும் அழிந்து, நேர்மறை சக்திகள் வீட்டில் நிறைய ஆரம்பிக்கும். இதனால் உங்கள் வீடு புனிதமடைந்து உங்கள் ஆசைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற ஆரம்பிக்கும்.

- Advertisement -