வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்தால் என்ன பலன் தெரியுமா? இப்படி நடந்தா உடனே மாத்திடுங்க!

blub-astro
- Advertisement -

வீடு அமைந்திருக்கும் திசை மற்றும் வீட்டு அமைப்பை கூட நம் வாழ்வியலுடன் ஒப்பிட்டு பலன்கள் குறிப்பிடப்படுகிறது. இதை வாஸ்து சாஸ்திரம் என்கிறோம். அது போல வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளையும், அதனால் சில பலன்களையும் கொடுக்கக்கூடிய தன்மை உண்டு. அந்த வகையில் வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்தால் என்ன பலன்? இதனால் விளையும் விளைவுகள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீக குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வீட்டில் இந்த திசையில், இந்த மூலையில் இந்த பொருளை வைத்தால் அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லப்படுவது உண்டு. சில பொருட்கள் பழுதடைந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும், இல்லை எனில் வீட்டில் சில பிரச்சனைகள் வரக்கூடும் என்றும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதேபோல வீட்டில் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட பொருட்கள் கடிகாரம், லைட் போன்றவை திடீரென நன்றாக இருந்து பழுதடைந்து போய்விட்டால் அங்கு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க துவங்குமாம்.

- Advertisement -

பல வருடங்கள் ஆகிவிட்டது, அது தானாய் பழுது போய்விட்டது என்றால் அது கணக்கு கிடையாது ஆனால் நல்ல நிலையில் இருக்கும் போது சில எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைய நேர்ந்தால் அங்கு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க துவங்கும். நெகட்டிவ் வைப்ரேஷன்ஸ் அதிகரித்தால் குடும்பத்தில் நிம்மதி என்பது இருக்காது. நெகட்டிவ் வைப்ரேஷன்ஸ் நம்முடைய உடலிலும், நம்மை சுற்றி இருக்கும் இடத்திலும் கண்ணுக்கு தெரியாமல் உலாவிக் கொண்டே இருக்கும். இது நம்மை விட்டு நீங்கி நல்ல ஒரு வைப்ரேஷன்ஸ் உருவாக வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களில் சிலவற்றை நாம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் எதுவாக இருந்தாலும் அது வைத்திருக்கும் இடங்களை சுற்றிலும் தூசுகள், குப்பைகள் படிந்திருப்பதை நீங்கள் கண்டதுண்டா? சிலருடைய வீடுகளில் இப்படித்தான் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுடைய இல்லத்தில் அதிக அளவு நெகட்டிவ் வைப்ரேஷன்ஸ் இருக்கும். ஆனால் சிலர் எலக்ட்ரானிக், எலக்ட்ரிகல் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதையும் நன்கு பத்திரமாக துடைத்து பளபளன்னு வைத்திருப்பார்கள்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவற்றை கூட நகர்த்தி அந்த இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து விடுவார்கள். இதனால் தூசுகள் அங்கு சேர விடாமல் பாதுகாக்கலாம், இதன் மூலம் வரக்கூடிய நெகட்டிவ் வைப்ரேஷங்களையும் தடுத்து நிறுத்தலாம்.

அதுபோல பணம் வைக்கக்கூடிய பீரோவை உட்புறம் மட்டும் அல்லாமல் வெளிப்புறமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பீரோவை நகர்த்தி பார்த்தால் அட்டை அட்டையாக தூசுக்கள் ஒட்டிக் கொண்டு இருக்கும். இதுபோல இருந்தால் அந்த வீட்டில் எப்படி மகாலட்சுமி குடியேறுவாள்? இங்கே எல்லாம் யார் வந்து பார்க்கப் போகிறார்? என்று தான் இந்த வேலையை நாம் செய்யாமல் விட்டு விடுகிறோம். அதுமட்டுமல்லாமல் சிலர் துவைத்த துணியை மடித்து கூட வைக்க மாட்டார்கள், அப்படியே சொருகி வைப்பார்கள், இது போலவும் செய்யக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
வாராஹிக்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் செய்வினை உங்கள் பக்கம் கூட நெருங்காது. வந்த செய்வினையும் தலை தெறிக்க திரும்பி ஓடிவிடும்.

வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் பொழுது எல்லா இடத்தையும் சேர்த்து தான் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக வீட்டை சுற்றி இருக்கும் நான்கு மூலைகளிலும் தூசுகள் படியவே கூடாது. மின் விசிறியில் இருந்து லூசுகள் கொட்டுவது, தூசு அடைத்து கடிகாரம் ஓடாமல் நின்று விடுவது போன்றவையும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். வீண் வம்பு, வழக்குகள், வீண் பழிகள் போன்றவையும் உங்களுக்கு வரலாம், எனவே இந்த சில விஷயத்தில் கவனமாக இருப்பது ரொம்பவும் நல்லது.

- Advertisement -