வாராஹிக்கு இந்த ஒரு விளக்கை ஏற்றினால் செய்வினை உங்கள் பக்கம் கூட நெருங்காது. வந்த செய்வினையும் தலை தெறிக்க திரும்பி ஓடிவிடும்.

varahi-vilakku
- Advertisement -

அண்டம் நடுங்க, சிங்க வாகனத்தின் மீது ஏறி, சத்துருக்களை ஒழித்து, தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை அழிக்க, அவதாரம் எடுத்தவள் தான் இந்த வாராகி அன்னை. ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை, கண் திருஷ்டி இவைகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள அந்த வாராஹி அம்மன் வழிபாடு நமக்கு கை கொடுக்கும். உக்கிரமானவள் வாராஹி, அவளை நம்மைப் போல் இருக்கும் சாதாரண மனிதர்கள் எல்லாம் வழிபாடு செய்யக்கூடாது என்று சில பேர் சொல்லுவார்கள். தூய்மையான மனதோடு, உண்மையான பக்தியோடு, வாராகி தாயை எந்த உயிரினமாக இருந்தாலும் வழிபாடு செய்யலாம். அதில் எந்த தவறும் கிடையாது.

varahi2

செய்வினை அகல வாராகி வழிபாட்டை எப்படி செய்வது என்றுஎன்ற ஆன்மீகத் தகவல் தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம் ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஏவல் பில்லி சூனியம் ஒருவரால் வைக்கப்படுகிறது என்றால் அது நம்முடைய கெட்ட நேரத்தில்தான். நம்முடைய ஜாதகத்தில் எப்போது கெட்ட நேரம் வரப்போகிறது என்று அறிந்து கொண்டு தான் எதிரிகள் நமக்கு இப்படிப்பட்ட பிரச்சனைகளை தூண்டி விடுவார்கள். ஆகவே உங்களுடைய ஜாதகத்தை முன்பின் தெரியாதவரிடம் காட்டாதீங்க.

- Advertisement -

உங்களுடைய பிறந்த தேதியையும் நேரத்தையும் முன்பின் தெரியாதவர்களிடம் சொல்லாதீர்கள். ஏன் தெரிந்தவர்களிடம் கூட இதையெல்லாம் சொல்லக்கூடாது. அதை வைத்து ஜாதகம் கணித்து உங்களுக்கு கெட்ட நேரம் வரும்போது உங்களை வீழ்த்துவதற்கு சதி தீட்டப்படும். நல்ல நேரம் வரும்போது செய்வினை கூட நம்மை எதுவும் செய்யாது. கெட்ட நேரம் வரும்போது வயிற்று எரிச்சலோடு மற்றவர்கள் நம்மை பார்த்தால் கூட நமக்கு அது பிரச்சனை தான். சரி இப்போது பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

agal-vilakku-deepam

செய்வினை அகல வாராஹி வழிபாடு:
உங்களுடைய வீட்டின் அருகில் வாராகி அம்மன் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் இருந்தால் அந்த இடத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வராகி அம்மன் கோவிலுக்கு சென்று வாராகி அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் பூக்களை வாங்கி கொடுத்து, 2 நெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, வாராகி அம்மனை 16 முறை வலம் வர வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடிக்க வேண்டும்.

- Advertisement -

வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று மேல் சொன்ன நேரத்தில் வாராகி அம்மனை 16 முறை வலம் வந்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். எதிரிகளால் வரக்கூடிய எந்த துன்பமும் உங்களை எதுவும் செய்ய முடியாது.

இதையும் படிக்கலாமே: இன்று மாலைக்குள் இந்த இரண்டு தீபத்தை ஏற்றி விட்டால், மூன்று கோடி ஏகாதசிகள் வணங்கிய பலனை பெறுவதோடு, வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் என்பது வந்தே தீரும்.

தொடர்ந்து இதை 16 வாரம் வெள்ளிக்கிழமை செய்யுங்கள். அதற்கு மேல் கணக்கு இல்லாமல் இந்த வழிபாட்டை செய்யலாம். அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் 16 வாரங்கள் இந்த வழிபாட்டை விடாமல் மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் வரும்போது அந்த வாரத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். ஆண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். தவறு கிடையாது. ஒரு வாரம் இந்த வழிபாட்டை செய்த உடனேயே புரியாத கஷ்டங்கள் எல்லாம், வந்த வழி தெரியாமல் பின்னே சென்று விடும். தன்னை நம்பி வந்தவர்களை வாராஹித்தாய் கைவிடமாட்டாள் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -