உங்க ஆசைகள் அனைத்தையும் ஈடேற்ற கூடிய அதிசய சூட்சும பரிகாரம். இந்த சூட்சமத்தை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்காத அதிசயங்கள் எல்லாம் ஐந்தே நாளில் நடக்கும்.

angel numbers
- Advertisement -

ஒரு மனிதனின் எண்ண ஆற்றலானது மிகப் பெரிய சக்தி வாய்ந்தது. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம் என்ற வார்த்தை அனைவரும் அறிந்ததே. இதற்கு அர்த்தம் என்னவென்றால் நாம் என்னவாக வேண்டும் என்று நம் ஆழ்மனது சிந்தித்து வேண்டுகிறதோ, அதுவாக நாம் நிச்சயமாக மாறுவோம். அதே போல் நமக்கு என்ன வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் கேட்டாலும் நிச்சயம் அது நமக்கு கை கூடும். அதற்கு சில சூட்சம எண்களை பயன்படுத்த வேண்டும். அப்படியான ஒரு சூட்சம எண் பரிகாரத்தை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நினைத்ததெல்லாம் நிறைவேற சூட்சம பரிகாரம்:
இதை ஏஞ்சல் எண் பரிகாரம் என்றும் சொல்லாம். இந்த பரிகாரத்தை வெறும் ஐந்து நாட்கள் செய்தால் போதும் நீங்கள் ஆசைப்பட்டவை அனைத்தும் நிறைவேறும். அதற்கு உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதாவது இன்று நாம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அடுத்த படியாக காரில் செல்வோம் என்று நினைக்காமல் அதற்கு அடுத்தபடியாக விமானத்தில் செல்ல வேண்டும் என்பதான எண்ணங்களை கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி யோசிப்பது பேராசை ஆகாதா என்று நீங்கள் கேட்கலாம். கிடையாது நீங்கள் எவ்வளவு பெரிதாக ஆசைப்படுகிறீர்களோ அப்போது அதன் அருகிலாவது உங்களுடைய ஆசைகள் ஈடேறும். நீங்கள் நினைக்கும் போதே இவ்வளவு நமக்கு போதும் இதற்கு மேல் எதுவும் நமக்கு கிடைக்காது போன்ற எண்ணங்களை கொண்டிருந்தால் உங்களால் பெரு வாழ்வை வாழ முடியாது.

இந்த பரிகாரத்தை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தொடங்குவது மிகவும் சிறந்தது. அப்படி செய்ய முடியாதவர்கள் மதியம் 12 மணிக்குள் செய்த விட வேண்டும். அதற்கு மேல் செய்யக் கூடாது. அதாவது சூரியன் ஏறு முகத்தில் இருக்கும் போது செய்ய வேண்டும். சூரியன் இறங்கு முகத்தில் இருக்கும் போது இதை செய்யதால் பலன் இருக்காது.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அந்த கடனை நான் முழுவதுமாக அடைத்து விட்டேன் அல்லது நகை அடமானத்தில் இருக்கிறது அதை நான் திருப்பி விட்டேன், ஒரு வீடு எனில் அதை நான் வாங்கி விட்டேன். இப்படி நீங்கள் வாங்க வேண்டும் செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்து முடித்ததாகவும் வாங்கி முடித்ததாகவும் எழுத வேண்டும்.

இப்படி ஒரு நாளில் 55 முறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து எழுத வேண்டும். ஐந்தாவது நாட்கள் முடிவில் கண்டிப்பாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்த காரியம் நடப்பதற்கான வழி உங்களுக்கு கிடைக்கும். அதற்கான ஆற்றலை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தின் ஏஞ்சல் எண்ணாது 555. இதன் காரணத்துவமானது முதல் ஐந்து என்ற எண் புதனுடைய ஆதிக்கத்தை குறிக்கிறது. இரண்டாவது ஐந்து ஆனது குபேரருடைய ஆதிக்கத்தை குறிக்கிறது. மூன்றாவது ஐந்து, பஞ்சபூதங்களையும், நாம் செய்யும் பரிகாரத்தின் நாட்களையும் குறிக்கிறது. புதனுடைய ஆதிக்கம் ஆனது நம்முடைய எண்ணங்களை தெளிவடைய செய்கிறது குபேரர் என்பது நமக்கு பொன்னையும் பொருளையும் வாரி வழங்கக் கூடியவர். இவர்களின் அருள் ஆசிகளோடு பிரபஞ்சத்திலிருந்து நமக்கு தேவையானதை பெற பயன்படுத்துவது தான் இந்த பரிகாரத்தின் தத்துவம்.

இதையும் படிக்கலாமே: திடீர் கெட்ட நேரத்தால் பெரிய பணக்கஷ்டத்தில் முடங்கி போய் விட்டீர்களா? பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் இப்படி வையுங்கள். கெட்ட நேரம் சொல்லாமல் கொள்ளாமல் உங்கள் உடம்பை விட்டு அடித்துப் பிடித்து தூரம் ஓடிப் போய்விடும்.

இதை செய்யும் போது நாம் தெளிவாக கவனத்தில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். நீங்கள் எதை நினைத்து எழுதுகிறீர்களோ அது முடிந்ததாக நீங்கள் சொல்ல வேண்டும் உங்கள் ஆழ்மனது அதை முழுவதுமாக நம்ப வேண்டும். இந்த எண்ணமும் செயலும் ஒன்றாக இணையும் போது பரிகாரம் முழு பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -