நினைத்த காரியம் நடக்க மந்திரம்

hand manthra
- Advertisement -

சிலருடைய வாழ்க்கை நிலையை நாம் கேள்விப்பட்டால் அதிசயத்துப் போகும். இவர்களெல்லாம் எப்படித் தான் வாழ்கிறார்களோ என்று நாமே நமக்குள் கேள்வி கேட்டுக் கொள்வோம். அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கை துக்ககரமானதாக இருக்கும். ஒவ்வொரு நாளை நகர்த்துவது அத்தனை கொடுமையான விஷயங்களாக இருக்கும்.

எல்லோருக்கும் கஷ்டம் இருக்கத் தான் செய்யும். ஆனால் ஒரு சிலர் துன்பத்தின் விளிம்பு நிலைக்கு சென்று இருப்பார்கள். அவர்கள் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் அது சரியாக முடியாது. எதிலும் வெற்றி என்ற நிலையை அவர்களால் எட்டவே முடியாது. இதனாலே அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள்.

- Advertisement -

இப்படியானவர்கள் சுற்றி இருக்கும் அனைத்து சூழ்நிலையும் எதிர்மறை ஆற்றலை கொண்டதாகவே இருக்கும். இதனால் குடும்பம் வேலை செய்யும் இடம் என அனைத்து இடத்திலும் பிரச்சனைகள் சூழ்ந்ததாக இருக்கும். இப்படி ஆனவர்கள் தங்களை கைராசிக்காரர்களாகவும் நேர்மறை ஆற்றல் கொண்டவர்களாகவும் மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டு முறையைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தொட்டது துலங்க மந்திரம்

இந்த மந்திர வழிபாட்டை செய்ய நாம் விரதம் எந்த விதமான பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டியது கிடையாது. இரவு நீங்கள் எந்த மாதிரியான அசைவ உணவுகளை சாப்பிட்டு இருந்தாலும் சாப்பிட்டு முடித்த பிறகு முடிந்தால் குளித்து விட்டு உறங்க செல்லுங்கள். அது முடியாத பட்சத்தில் இரவு அசைவத்தை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

அசைவம் சாப்பிட்டால் இந்த மந்திரத்தை சொல்லக் கூடாது என்று கிடையாது. அசைவம் சாப்பிட்டாலும் சொல்லலாம் ஆனால் அசைவம் சாப்பிட்டு இது போன்ற மந்திர வழிபாடு செய்யும் பொழுது உடனடியாக பலனை பெற முடியாது கொஞ்சம் கால தாமதம் ஆகும் அவ்வளவு தான். சரி இப்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி பார்க்கலாம்.

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்தபடியே உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் என யாரை வேண்டுமானாலும் மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய இந்த துரதிஷ்ட நிலை மாறி நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று எந்த அளவிற்கு உங்களால் உருகி வேண்டிக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு கீழ் வரும் மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஐம் பகவ என்ற இந்த ஒரு மந்திரத்தை அப்படியே உங்கள் உள்ளங்கையை பார்த்தபடி சொல்லுங்கள். பொதுவாக அனைவரும் காலையில் உள்ளங்கையில் பார்ப்பது நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் உள்ளங்கையில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக ஐதீகம். அதுமட்டுமின்றி நம்முடைய உள்ளம் கையில் மகாலட்சுமி தாயார் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் நினைக்கும் இந்த எண்ணமும் உங்களுடைய மனதிற்கு பிடித்த தெய்வங்களின் அனுகிரகமும் இந்த மந்திரத்தின் சக்தியும் உங்களுடைய அனைத்து எதிர்மறை ஆற்றலையும் நீக்கி நேர்மறை ஆற்றல் மிக்கவராக மாற்றி விடும். அதுமட்டுமின்றி நீங்கள் எந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு இருந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ அந்த தெய்வமே உங்கள் வீடு தேடி வரும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மகா சிவராத்திரி அம்மன் வழிபாடு

இதைத் தவிர நமக்கு வேறு என்ன வேண்டும் தெய்வம் நம்முடன் எப்போதும் இருந்தால் நாம் தொட்ட காரியம் எல்லாம் துவங்க தானே செய்யும். இந்த மந்திர வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -