மகா சிவராத்திரி அம்மன் வழிபாடு

pray amman
- Advertisement -

இன்று மகா சிவராத்திரியிடம் கூடிய சுக்கிர வார பிரதோஷம் இணைந்து வந்துள்ளது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடும் போது நம்முடைய பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் சேரும். இத்துடன் சுக்கிர வார பிரதோஷம் சேர்த்து வந்திருப்பதால் இந்த வழிபாடு நம்முடைய பணப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளத்துடன் வாழக் கூடிய யோகத்தையும் தரும்.

இத்தகைய அற்புதமான நாளில் அனைவரும் சிவபெருமானை வழிபாடு செய்வது பற்றியும் அவருக்கான விரத முறைகளை பற்றியும் தான் அறிந்து வைத்திருப்பார்கள். இப்படியான இந்த நாளில் அம்பிகையை வழிபாடு செய்வது நம்முடைய குடும்பத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து நல்ல முறையில் குடும்பம் சந்தோஷமாக வாழ வழி வகுக்கும். அது எப்படி என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வ செழிப்புடன் வாழ அம்மன் வழிபாடு

மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமான் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் அம்பிகை வழிபாடும். ஏனெனில் இந்த உலக மக்களின் நலனுக்காக இந்த தினத்தில் சிவபெருமானை நினைத்து உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருந்து அன்னை வழிபட்டதால் உருவானதே இந்த சிவராத்திரி.

அப்படியான இந்த தினத்தில் அன்னையின் மனதை குளிர வைத்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவதும் மிகவும் முக்கியம். அதற்கான ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அம்மன் ஆலயம் இல்லாதவர்கள் சிவாலயத்தில் உள்ள அம்மனை வணங்கலாம்.

- Advertisement -

இன்றைய நாளில் இரவுக்குள் அம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அப்படி செல்லும் பொழுது அம்பிகைக்கு சிகப்பு நிறத்திலான மலரை வாங்கி செல்லுங்கள். அதே போல் சிகப்பு நிறத்தில் குங்குமத்தையும் வாங்கி செல்லுங்கள். இவை இரண்டையும் கொண்டு சென்று அன்னைக்கு பூக்களை சாற்ற கொடுத்து விடுங்கள். இந்த குங்குமத்தை மட்டும் அன்னையின் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகு அதில் கொஞ்சமாக கேட்டு நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த குங்குமத்தை கொண்டு வந்து உங்கள் பூஜை அறையில் வைத்து விட்டு தினந்தோறும் இதை நெற்றியில் அன்னையை நினைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும், நிம்மதி நிலவும், குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து ஒற்றுமையுடன் வாழக்கூடிய யோகம் கிடைக்கும். இவை அனைத்திலும் விட அனைத்து பிரச்சனைக்கும் மூல காரணமாக பணத்தடை விலகும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் உயர லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு

இன்றைய நாளில் சிவ வழிபாட்டுடன் சேர்த்து அம்பிகையையும் இந்த முறையில் வழிபாடு செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் குடும்பம் என்றென்றைக்கும் எந்தவித பிரச்சனையும் இன்றி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -