இரவு தூங்கும் முன் 4 சொட்டு இதை முகத்தில் தடவிக் கொண்டு படுத்தால் மறுநாள் காலையில் பட்டு போல முகம் பளபளன்னு மின்னும்!

face-massage-oil
- Advertisement -

இன்று இருக்கும் சூழ்நிலைக்கு நம்முடைய ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிப்பதில் நேரத்தை ஒதுக்க மறுக்கிறோம். ஆரோக்கியம் மற்றும் அழகு நீடிக்கும் காலத்திற்கு ஏற்ப உங்களுடைய உடலில் வலிமையும், தன்னம்பிக்கையும் இருக்கும் என்பதை எப்பொழுதும் மறந்து விடக் கூடாது. மற்றவர்களுக்காக உழைக்கும் நீங்கள், ஒரு ஐந்து நிமிடமாவது உங்களுக்கென நேரத்தை ஒதுக்கி கொள்வது மிகவும் முக்கியமாகும். இப்படி நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு இரவு நேரத்தில் செய்யக்கூடிய இந்த ஒரு அழகு பராமரிப்பு காலத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்! முகம் பட்டுப் போல மின்னுவதற்கு இரவு நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவசரமான இந்த உலகில் நேரம் இல்லாமல் இருப்பவர்கள் இரவு தூங்கும் முன்பு ஒரு பத்து நிமிடம் மன மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு தியானம் செய்ய வேண்டும். பத்து நிமிடம் அமைதியாக அமர்ந்து கொண்டு எந்த விதமான பிரச்சனைகளை பற்றிய சிந்தனைகள் இல்லாமல் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், நம்மை நம்பித் தான் நம்முடைய குடும்பம் இருக்கிறது எனவே நம்மை முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

- Advertisement -

இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். குடும்பத்திற்காக உழைக்கும் ஆண்கள், தங்களுக்கு என இந்த பத்து நிமிடத்தை ஒதுக்கி இதை செய்வதன் மூலம் மன மற்றும் சரும பராமரிப்பு காலத்திற்கும் கொடுக்கலாம். பாதம் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் சருமத்தின் உள்ளே ஊடுருவி சென்று இறந்த செல்களை நீக்கி, புத்தம் புதிய செல்களை புதுப்பிக்கும் ஆற்றல் படைத்துள்ளது.

விட்டமின் ஈ எண்ணெய் கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது உண்டு. இதுவும் வேர்க்கால்களில் ஊடுருவி சென்று ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான ஒரு எண்ணெய் ஆகும்! எனவே இதை கூந்தலுக்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும் பயன்படுத்துவது சரும பராமரிப்பை மேம்பட செய்யும். பாதாம் ஆயில் எந்த அளவிற்கு எடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு விட்டமின் ஈ ஆயில் சரிசமமாக எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இரவு சாப்பாட்டை நீங்கள் முடித்து ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு 10 நிமிடம் அமைதியாக தியானம் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த எண்ணெயை நான்கு சொட்டுகள் எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தம் கொடுத்து உறுத்தல் இல்லாமல் மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடம் இது போல ஆன்டி க்ளாக் வைஸ் மற்றும் கிளாஸ் வைஸ் என்று மாற்றி மாற்றி முகம் முழுவதும் மசாஜ் செய்த பின்பு நன்கு காய விட்டு விடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல உறங்க சென்று விடலாம். மறுநாள் காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் மாசு, மருவின்றி பட்டு போல ஜொலிக்கும். பியூட்டி பார்லருக்கு போய் அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவிலேயே வீட்டிலேயே கண்கூடாக பார்க்க கூடிய இந்த இளமையான சரும பராமரிப்பு எல்லோருக்குமே எளிதாக கிடைக்கக் கூடியது தான் எனவே நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -