நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர பெருமாள் பரிகாரம்

perumal
- Advertisement -

நீண்ட நாட்களாக விற்காமல் இருக்கக்கூடிய நிலத்தை நல்ல விளக்கு விற்க வேண்டும் என்றாலும், சரி அல்லது ரொம்ப நாளா நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குது, ஆனா நல்ல நிலமாக அமையவில்லை. நல்ல நிலம் அமைந்தால், அந்த நிலத்தின் விலை ரொம்ப அதிகமா இருக்குது. இப்படியே நிலம் வாங்க கூடிய யோகம் தள்ளிப்போகிறது என்றாலும் சரி இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுக்கு தகுந்த நல்லதொரு பூமியை அந்த பெருமாள் காட்டிக் கொடுப்பார்.

ஏதாவது வில்லங்கமான நிலத்தை வாங்கிட்டீங்க, உங்களிடம் நிலத்தை விற்றவர் உங்களை ஏமாற்றிவிட்டார், அந்த நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் இருந்து விடுபடவும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்றவங்க, உங்களுடைய பிசினஸில் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய பெருமாள் வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர

இந்த பரிகாரம் செய்ய நமக்கு ஆல மரத்தின் இலை 3 தேவை. 3 துண்டு பச்சை கற்பூரம் தேவை. என்னைக்கு நீங்க நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக பேச போறீங்களா, அல்லது புதுசா நிலம் பார்க்க போறீங்களா, அன்று இந்த வழிபாட்டை செய்யணும். 3 ஆலமர இலைகளை எடுத்து ஒரு இலைக்கு மேல் இன்னொரு இலையை வைத்து அடுக்கி, அதன் உள்ளே 3 துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூல் போட்டு கட்டி தயார் செய்து கொள்ளுங்கள்.

பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு போங்க. அந்த அர்ச்சகரியிடம் இந்த இலையை கொடுத்து பெருமாள் பாதங்களில் வைத்து தரும் படி கேளுங்கள். கூடவே வெற்றிலை பாக்கு பூ பழம் துளசி இலைகள் எல்லாம் கொண்டு சென்று உங்கள் பெயரைச் சொல்லி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு இந்த ஆலமர இலையில் பச்சை கற்பூரத்தை சுருட்டி வைத்திருக்கிறீர்கள் அல்லவா. அதை மட்டும் எடுத்து உங்க பேக், உங்க பர்ஸ்லையோ, வச்சுக்கோங்க. பிறகு நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை பேச செல்ல வேண்டும். பெருமாள் பாதத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு பொருள் உங்கள் கையில் இருந்தால் உங்களுக்கு யோகம் அடிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

இந்த ஆலமர இலக்கு ஜனவசியம் பண வசிய தன்மை அதிகமாக உண்டு. அதை கொண்டு போய் பெருமாள் பாதங்களில் வைக்கும் போது அதனுடைய சக்தி இன்னும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். பெருமாளை கும்பிடும் போது புதனின் அனுக்கிரகமும் உங்களுக்கு இருக்கும். ஆகவே, புத்தி கூர்மையோடு செயல்பட்டு அந்த வேலையை சரியா முடிச்சிடுவீங்க.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர சந்தன பரிகாரம்

கூடவே வசிய தன்மை கொண்ட பச்சை கற்பூரத்தையும் இதில் நாம் வைத்திருக்கின்றோம். எந்த எதிர்மறை ஆற்றலும் உங்களிடம் நெருங்கவும் முடியாது. சக்தி வாய்ந்த எளிமையான இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால், பெருமாளே மனித ரூபத்தில் வந்து உங்கள் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்த்து வைப்பார். நம்பிக்கை உள்ளவர் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலன் பெறலாம்.

- Advertisement -