தங்கம் சேர சந்தன பரிகாரம்

gold1
- Advertisement -

தங்கம் என்ற வார்த்தையை சொன்னாலே பெண்களுடைய மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷம் வந்துவிடும். பெண்களுக்கும் இந்த தங்கத்துக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் என்று தெரியாது. வீட்டில் இருக்கும் பெண்கள், கையில் இருக்கும் காசை, தங்கமாக மாற்றி வைப்பார்கள். காசாக இருந்தால் செலவாகிவிடும்.

தங்கமாக இருக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் உதவும் என்று சொல்லி தங்கத்தை வாங்கி வைப்பார்கள். வாங்கி வைத்த தங்க ஆபரண நகைகளை போட்டு அனுபவிப்பது உண்டு. ஆனால் அது ஒரு சில நாட்கள் கூட நம் கையில் தங்குவது இல்லை. கூடிய சீக்கிரமே அடகு கடைக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, சில பேரால் என்னதான் நினைத்தாலும் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். தங்கம் வாங்காமல் இருப்பதும் ஒரு வகையில் துரதிஷ்டம் தான். நிறைய தங்கம் வாங்கணும், வாங்கிய உங்க நகை அடகு கடைக்கு போகாமலும் இருக்கணும் இதற்கு என்ன பரிகாரம் செய்வது. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரம் இதோ உங்களுக்காக.

தங்கம் வாங்க பரிகாரம்

தினமும் சந்தன திலகத்தை நெற்றியில் இட்டுக் கொண்டாள் நிறைய தங்கம் சேரும். ஆண்களும் இந்த திலகத்தை வைத்துக் கொள்ளலாம். பெண்களும் இந்த திலகத்தை வைத்துக் கொள்ளலாம். சுத்தமான சந்தனத்தில் பன்னீர் ஊற்றி குழைத்து குங்குமத்துக்கு மேலே, இந்த சந்தனத்தை நெற்றியில் தினமும் வைத்து வந்தால் நிறைய தங்கம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். ஓரிரு நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து விட்டு, தங்கம் வாங்கவில்லை என்று சொல்லக்கூடாது.

- Advertisement -

தொடர்ந்து தினமும் இந்த சந்தன திலகத்தை நெற்றியில் இட்டு வரக்கூடிய பெண்களுக்கும் தங்கம் சேரும். ஆண்களுக்கும் தங்கம் சேரும். சுத்தமான சந்தன கட்டை, சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொள்வது ரொம்ப சிறப்பு. ஆண்களாக இருந்தால் உங்கள் மனைவிக்கோ அல்லது மகளுக்கும் தங்கம் வாங்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கும், தேவையான தங்கத்தை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். தவறு கிடையாது.

அதேபோல புது தங்கத்தை வாங்கப் போகிறீர்கள் என்றால், அது புதன்கிழமை அன்று வாங்குங்கள். அதிலும் மதிய நேரத்திற்கு முன்பாகவே அந்த தங்கத்தை நீங்கள் வாங்கி விட வேண்டும். புதன்கிழமையோடு உங்க பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளாக அமைந்தால், இன்னும் சிறப்பு. நீங்கள் பிறந்த நட்சத்திரமும், புதன்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய நாளில், தங்கத்தை ஒரு முறை நீங்கள் வாங்கி விட்டால், மீண்டும் மீண்டும் தங்கமானது உங்களுக்கு சேரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சினை தீர பரிகாரம்

மல்லிகைப்பூ, வெள்ளை தாமரை, இந்த இரண்டு பூக்களையும் எப்போதெல்லாம் உங்களால் முடியுமோ அப்போதெல்லாம் நகை வைக்கும் பெட்டியில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொண்டே இருக்கவும். அந்த பூ வாடியவுடன் வெளியே எடுத்து போடலாம். தவறொன்றும் கிடையாது. இந்த இரண்டு பூக்களை பணப்பெட்டியில் வைத்தால், அந்த இடத்தில் இருக்கும் பணம் பல மடங்காக பெருகும். நகைப்பேட்டையில் வைத்தால் நகை பல மடங்காக பெருகும்.

- Advertisement -