வாரத்தில் ஒரு நாள் காகத்திற்கு இந்த உணவை வைப்பதால் கர்ம வினைகள், பித்ரு தோஷம் நீங்கி உங்க அடுத்த தலைமுறை கூட பேரும் புகழும் பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.

- Advertisement -

காகத்திற்கு சாதம் வைக்கும் முறை என்பது நாம் புதிதாக செய்வது கிடையாது. இந்த முறையானது நம்முடைய முன்னோர்கள் முதற் கொண்டு காலம் காலமாய் பின்பற்றி வரும் வழக்கம் தான். இந்து தர்ம சாஸ்திரத்தில் இந்த காகத்தை அடிப்படையாக வைத்து பல விஷயங்கள் உள்ளது. காகம் ஒரு வீட்டில் வந்து கரைவது முதல் கொண்டு அந்த வீட்டில் எடுக்கும் உணவு, வந்து அமரும் நேரம், திசை என காகத்தை சுற்றி நிறைய ஆன்மீக விஷயங்கள் உள்ளது.

இப்போதும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் காகத்திற்கு வைக்கும் சாதத்தில் நாம் இந்த ஒரு பொருளை சேர்த்து வைக்கும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து நம் சந்ததியினர் நிம்மதியாக வாழ வழித் தேடி கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் காகம் இறந்த நம் வீட்டு முன்னோர்களாகவே பார்க்கப்படுகிறது. அத்தகைய காகத்திற்கு நாம் தினமும் வைக்கும் இந்த பொருளால் கர்ம வினைகளை சரி செய்து கொள்ளலாம்.

- Advertisement -

கர்ம வினைகள் தீர வழி:
நம்முடைய கர்ம வினைகள் தீர கடவுள் வழிபாடு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் முன்னோர் வழிபாடும் தான். முன்னோர் வழிபாட்டில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த காகத்திற்கு சாதம் வைப்பது. அதே போல் நவகிரகங்களில் சனி பகவானுடைய வாகனமாக கருதப்படுவதும் இந்த காகம் தான். காகத்திற்கு நாம் வைக்கும் இந்த உணவினால் சனி கிரகத்தினால் ஏற்படும் தாக்கத்தையும் கூட குறைத்துக் கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.

நீங்கள் தினமும் காகத்திற்கு சாதம் வைத்தாலும் சரி அல்லது வீட்டில் வேறு ஏதேனும் பொருட்களை வைக்கும் பழக்கம் இருந்தாலும் சரி அத்துடன் கருப்பு உலர் திராட்சை வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சையை நாலு, ஆறு, எட்டு என்ற இந்த மூன்று எண்ணிக்கையில் தினமும் வைக்க வேண்டும். இப்படி தினமும் வைக்க முடியவில்லை என்றாலும் சனிக்கிழமைகளில் ஆவது தவறாமல் வைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் காகத்திற்கு சாதம் வைப்பது என்பது தெய்வம், முன்னோர்கள், கிரக கோளாறு என அனைத்திற்கும் பொதுவான ஒரு விஷயமாக பார்க்கப்படுவதால், இந்த காகத்திற்கு நாம் சாப்பிட்டு எச்சிலான சாதத்தையும், நம் வீட்டில் மீந்த பழைய சாதத்தையும் வைக்கக் கூடாது என்று ஆணித்தரமாக சொல்லப்படுகிறது. இதை செய்வதால் நம்முடைய கர்ம வினைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. எனவே இந்த ஒரு தவறை தவறியும் செய்யாமல் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை வேரோடு அழிக்க, இந்த 1 வேரை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் போதும். பிறகு வீட்டில் நிம்மதி மட்டும் நிரந்தரமாக தங்கி இருக்கும்.

இந்த ஒரு விஷயத்தை நாம் தவறாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் போது நம்முடைய முன்னோர் சாபம், பித்ரு தோஷம், கர்ம வினைகள் என அனைத்தும் நீங்கி, நம்முடைய குடும்பம் நல்ல சீரும் சிறப்புமாக வாழ நாம் வழி தேடி கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் உள்ள கருத்துக்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை செய்து பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -