வீட்டுக்குள் கெட்ட சக்தி நுழையாமல் இருக்க, நிலை வாசல் கதவு பரிகாரம்

bairavar
- Advertisement -

நிலைவாசலின் வழியாகத்தான் நம் குடும்பத்திற்குள் நல்லதும் வரும், கெட்டதும் வரும். உங்கள் வீட்டு நிலை வாசல் கதவை இந்த தண்ணீரைக் கொண்டு வாரத்தில் ஒரு நாள் இப்படி துடைத்து வைத்தாலே போதும். வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலோ, துன்பங்களோ, துக்கமோ, கஷ்டமோ, கண் திஷ்டியோ, கடனோ நுழையவதற்கு வாய்ப்பே இருக்காது. இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள் உங்கள் வீடு நிச்சயம் கோவிலாக இருக்கும்.

நிலைவாசல் கதவு பரிகாரம்

வாரத்தில் ஒரு நாள் உங்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். ஒரு சின்ன கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக பச்சைக் கற்பூரம், இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு, இரண்டு வேப்ப இலைகளை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மயில் இறகு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கொத்தாக மயிலிறகு இருந்தாலும் சரி, அல்லது இரண்டு மூன்று மயிலிறகு, அல்லது ஒரு மயில் இறகு இருந்தாலும் பரிகாரத்திற்கு போதும். இந்த தண்ணீரை உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு குல தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். காவல் தெய்வமான கால பைரவரையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கால பைரவரே நீ எங்க வீட்டுக்கு காவல் தெய்வமா நிக்கணும் அப்படின்னு ஒரு ஐந்து நிமிடம் கண்களை மூடி வேண்டுதல் வையுங்கள்.

பிறகு இந்த மயில் இறகை அந்த தண்ணீரில் தொட்டு உங்களுடைய நிலைவாசல் கதவை மேல் பக்கத்திலிருந்து கீழ்ப்பக்கம் வரை துடைத்து விட வேண்டும். அதாவது மயிலிறகால் இந்த தண்ணீரைத் தொட்டு உங்க கதவை அப்படியே மேல் பக்கத்திலிருந்து கீழ்ப்பக்கம் வருடி விடுங்கள். இதே போல ஐந்து முறை அந்த மயிலிறகை தண்ணீரில் தொட்டு தொட்டு கதவை வருடிவிடவும்.

- Advertisement -

வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் நிலை வாசல் கதவில் காவல் தெய்வங்கள் குடியேறி விடும். குலதெய்வம் குடியேறும். வீட்டிற்குள் எந்த கெட்டதையும் நுழைய விடாது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு ஒரு சாதாரண துணியில் கதவில் இருக்கும் தூசை நன்றாக துடைத்து எடுத்து விட்டு, வாசல் கதவுக்கு, வாசல் படிக்கும், மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து, வாசல் படியில் கோலம் போட்டு பூக்கள் போட்டு நிலை வாசலை நமஸ்காரம் செய்து கொண்டு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனாமாக வாங்க கூடாதா 5 பொருட்கள்

உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த பரிகாரம் நிச்சயம் உதவி செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் தொடர்ந்து பதினோரு வாரம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -