இனாமாக வாங்க கூடாதா 5 பொருட்கள்

mahalashmi
- Advertisement -

காசு கொடுக்காமல் இனாமாக எந்த பொருள் கிடைத்தாலும் சரி, சந்தோஷமாக எதையோ சாதித்தது போல, அதை வாங்கி வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்துக் கொள்வோம். ஆனால் அதற்கு பின்னால் வரக்கூடிய பிரச்சினைகளை நாம் யோசிப்பதே கிடையாது. 100 ரூபாய்க்கு கிடைக்கும் பொருள், 50 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால் நிச்சயமாக அதில் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்.

இன்று தள்ளுபடி என்ற பெயரில் நாம் எத்தனையோ பொருட்களை விலை மலிவாக கடையிலிருந்து வாங்கி நம் வீட்டிற்கு கொண்டு வருகின்றோம். கூடவே ஒரு பொருள் வாங்கினால் ஒரு பொருள் இனம் என்று சொல்லிவிட்டால் போதும். அதை வாங்காமல் விடுவதே கிடையாது. அதிலும் குறிப்பாக இப்போதெல்லாம் இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர் என்றாலே போதும் நம்முடைய மக்கள் அந்த பொருளை வாங்கி குவித்து விடுகிறார்கள்.

- Advertisement -

ஒரு பொருள் பாதி விலைக்கு கிடைக்கிறது என்றால் அதற்குப் பின்னால் என்ன இருக்கும் என்று கொஞ்சம் யோசிங்க. சரி அது போகட்டும். இலவசமாகவே உங்களுக்கு இந்த ஐந்து பொருட்களை யாரோ ஒருவர் கொடுக்குறாங்க. அல்லது இந்த ஐந்து பொருளிலிருந்து ஏதோ ஒரு பொருளை கொடுக்கிறார்கள் என்றால், அதை நீங்கள் கைநீட்டி வாங்காதீங்க. அதனால் உங்களுக்கு எந்த நல்லதும் நடக்காது. மாறாக எதிர்மறை விளைவுகள் தான் ஏற்படும். அது என்னென்ன பொருள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

இனமாக வாங்க கூடாதா ஐந்து பொருட்கள்

கைக்குட்டை, ஊசி, உப்பு, கடுகு எண்ணெய், தீப்பெட்டி. இதில் பெரும்பாலும் ஊசி உப்பு கடுகு எண்ணெய் தீப்பெட்டி இதை நாம் இனமாக வாங்குவதற்கு வாய்ப்பு இல்லை. இதை யாராவது பாதி விலைக்கு தருகிறேன் என்றாலும் வாங்காதீங்க. இந்த நான்கு பொருட்களுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கிக் கொள்ளவும். ஆனால் இந்த கைக்குட்டை நமக்கு துணி எடுக்கும் போதெல்லாம் சில கடைகளில் இலவசமாக கொடுப்பாங்க. அந்த மாதிரி வாங்காதீங்க. கைக்குட்டைக்கு உண்டான ரூபாயை கொடுத்துவிட்டு கைகுட்டையை வாங்கி பயன்படுத்தவும்.

- Advertisement -

சில சமயம் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக தீப்பெட்டி கடனாக வாங்குவோம். அதை திருப்பித் தர மாட்டோம். மறந்து நம்ம பையிலேயே போட்டுக்கிட்டு வந்துருவோம். கோவில் வாசலில் விளக்கு விற்பவர்களிடம், தீப்பெட்டியை கடனாக வாங்கி செல்வோம். அதை திருப்பிக் கொடுக்க மறந்து விடுவோம். இப்படிப்பட்ட தவறையும் செய்யக்கூடாது.

துணி தைக்க கடையில் ஊசி வாங்கும் போது, கடன் வைத்து விட்டு ஊசி வாங்க கூடாது. கையில் காசு கொடுத்த பிறகுதான் ஊசி வாங்க வேண்டும். பொதுவாக எண்ணெய் பொருட்களை வாங்கும் போதும் கடன் வைத்துவிட்டு பொருளை வாங்காதீங்க. உப்பு கூட அப்படித்தான் காசு கொடுத்துட்டு தான் வாங்கணும். கடைக்காரர் உப்பு எடுத்து டேபிள் மேல வச்சுட்டார்னா, அத நீங்க எடுத்துட்டு வந்துருங்க. கடைக்காரரின் கையில் இருந்து கூட உப்பை நீங்கள் வாங்காமல் இருப்பது நல்லது.

- Advertisement -

சரி இந்த பொருட்களை எல்லாம் இனாமாகவோ, பாதி விலைக்கு வாங்கினால் என்ன ஆகும். பொருளாதாரத்தில் சிக்கல் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய பொருளாதாரம் எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமா குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் வளரக்கூடிய சூழ்நிலையை தடுக்கும் சக்தியானது உங்களை வந்து அடைவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் எல்லாம் உங்களுக்கு தேவையா. உங்க சொந்த காசை கொடுங்க நியாயமான விலையை கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது. அவ்வளவுதாங்க நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாலு விஷயங்களை நம்முடைய முன்னோர்கள் இலைமறை, காய் மறையாக நமக்கு சொல்லி வைத்து விட்டு சென்றுள்ளார்கள்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் நன்றாக படிக்க அனுமன் வழிபாடு

நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -