நிலையான வேலை இல்லை! நிலையான வருமானமும் இல்லை! வாழ்க்கையில் கஷ்டத்தை மட்டுமே பார்ப்பவர்கள், தினமும் இந்த சாமியை கும்பிட்டு வந்தாலே போதும். கஷ்டங்கள் அனைத்தும் தூரமாக ஓடிவிடும்.

pray
- Advertisement -

நம்மில் நிறைய பேருக்கு முதலில் நிரந்தரமான வேலையே கிடையாது. பிறகு எங்கு நிரந்தரமான வருமானம் இருக்கப்போகின்றது. நாம் செய்யக்கூடிய வேலை இன்று போகமுமா? நாளை போகுமோ? என்ற சந்தேகம். கொடுத்த வேலையை சரியாக முடிக்க முடியாத சூழ்நிலை. எங்கு பார்த்தாலும் பணத்தட்டுப்பாடு. வியாபாரத்தில் மந்தமான போக்கு. சாதாரண மக்கள் கையில் பணப்புழக்கம் கிடையாது. இந்த மாதம் டார்கெட்டை முடிக்கவில்லை என்றால் சம்பளமும் வராது. அடுத்தமாதம் வேலையும் போய்விடும். என்ன தான் செய்வது. எதைத் தொட்டாலும் பிரச்சனையாகவே உள்ளதே. என்று புலம்புபவர்கள் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் செய்வதற்கு வேலையே இல்லாமல், நல்ல வேலையை தேடித்தேடி, கிடைக்கின்ற வேலையை செய்து பத்தும் பத்தாமல் சம்பளத்தை வாங்கி நொந்து, நொடிந்து போய் சிலர் அமர்ந்திருப்பார்கள்.

sad-man

உங்களுக்கு அன்றாட தினசரி வாழ்க்கையில் இப்படிபட்ட எந்த பிரச்சனை இருந்தாலும் சரி நம்பிக்கையோடு இதை மட்டும் செய்து வாருங்கள் போதும். நிச்சயமாக வாழ்க்கையில் நிரந்தர வருமானம், நிரந்தர வேலை, செய்யும் வேலையில் மனத்திருப்தி அனைத்துமே கிடைக்கும்.

- Advertisement -

நாம் வசிக்கின்ற தெருவில் முனையிலோ அல்லது வீட்டின் அருகிலோ நிச்சயமாக ஏதாவது ஒரு கோவிலில் இருக்கும். நிறைய பேருக்கு காலையில் எழுந்து வாசலுக்கு வந்த உடன் அந்த கோவிலை பார்க்க கூடிய சூழலில் தான் வீடு அமைந்திருக்கும். காரணம் தெருவுக்கு தெரு கோவிலை அமைத்து, அந்தக் கோவிலில் உள்ள அம்மன் பெயரிலோ அல்லது மற்ற தெய்வங்களின் பெயரிலோ தான் தெருவில் பெயர் அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நம் ஊருக்கு ஒன்றும் புதுசு இல்லை. நிச்சயமாக உங்க வீட்டில் அருகில் இருக்கக்கூடிய தெய்வங்கள் உங்களுடைய இஷ்ட தெய்வங்களாக தான் இருக்கும். தினமும் அந்த தெய்வத்தை பார்த்து பார்த்துதான் நீங்கள் வளர்ந்து இருப்பீர்கள்.

praying-god1

நிறையபேர் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் செல்வதற்கு முன்பு, வீட்டு வாசப்படி தாண்டுவதற்கு முன்பு, அவரவர் வாசல் படியில் நின்று தெருவின் முனையில் இருக்கும் அந்த சுவாமியை ஒருமுறை மனதில் நினைத்து கும்பிட்டுவிட்டுத்தான் வீட்டை விட்டே வெளியே கிளம்புவார்கள். இப்படி நீங்கள் தினமும் கும்பிட கூடிய இஷ்ட தெய்வத்தின் திருவுருவப்படத்தை எப்போதுமே உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த இஷ்ட தெய்வம் பிள்ளையார் ஆக இருக்கலாம். அம்மன் ஆக இருக்கலாம். சிவன், பெருமாள், ஹனுமன் எந்த தெய்வமாக இருந்தாலும் சரி தினமும் நீங்கள் விரும்பி கும்பிட கூடிய, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய, உங்களுடைய இஷ்ட தெய்வத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டே செய்யும் வேலையை தொடங்குங்கள். உங்களுடைய இஷ்ட தெய்வம் உங்கள் கையில் இருந்தால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது. எந்த பிரச்சனையும் வராது. உங்களுடைய வேலை சுலபமாகி விடும் என்ற நம்பிக்கையே உங்கள் மனதிற்குள் முதலில் விதைத்து விடுங்கள்.

praying-vilakku

‘நம்முடன், நம் வீட்டு பக்கத்திலேயே வசிக்கும் தெய்வங்கள் எப்போதும் நமக்கு துணையாக நிற்கும். நம் வீட்டின் அருகில் இருக்கும் தெய்வம் நம்மை கண்காணித்துக் கொண்டே தான் இருக்கின்றது. நமக்கு அந்த தெய்வங்கள் நல்லது மட்டுமே செய்யும்’ என்று மனதில் ஆழமாக விதைத்து, உங்களுடைய வேலையை செய்ய தொடங்குங்கள். செய்யக்கூடிய வேலை நிச்சயமாக நல்ல படியாகத்தான் நடக்கும்.

நல்ல வேலை கிடைக்கும். தானாக சம்பளம் உயரும். பதவி உயரும். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி செல்லலாம். நீங்கள் முதலில் உங்களுடைய மனதில் விதைக்க வேண்டியது நம்பிக்கை. நம்பிக்கையோடு உங்களுடைய இறை வழிபாடு செய்யும் போது, உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றம் இரட்டிப்பு வேகத்தில் மேலே உயர்ந்து கொண்டே செல்லும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேல் சொன்ன விஷயத்தை முயற்ச்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம்.

- Advertisement -