1 ரூபாய் இருந்தால் போதும். மன நிம்மதியை விலை கொடுத்து வாங்கிடலாம். தீராத கஷ்டத்தில் சிக்கி இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

1-rupee
- Advertisement -

பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டது உண்டு. எதை வேண்டுமென்றாலும் காசு கொடுத்து வாங்கலாம். ஆனால், மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் காசு கொடுத்து வாங்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த பரிகாரத்தில் வெறும் ஒரு ரூபாயை வைத்து நம்முடைய சந்தோஷத்தை, மன நிம்மதியை காசு கொடுத்து வாங்க போகின்றோம். அது எப்படி என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக உள்ளதா. தீராத கஷ்டத்தில் இருந்து விடுபட ஆன்மீகம் சொல்லும் எளிமையான பரிகாரம் இதோ உங்களுக்காக.

தீராத கஷ்டத்தில் இருந்து விடுபட ஒரு ரூபாய் பரிகாரம்:
கண்டிப்பாக மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனதில் தீராத கஷ்டம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது எந்த கஷ்டமாக இருந்தாலும் சரி, அந்த கஷ்டம் சரியாவதற்கு இந்த பரிகாரத்தை செய்யலாம். உதாரணத்திற்கு திருமணம் நடக்கவில்லை, உங்கள் குழந்தைகள் சொல் பேச்சு கேட்கவில்லை. வருமானம் இல்லை. கடன் பிரச்சனை. நல்ல வேலை கிடைக்கவில்லை, எந்த கஷ்டம் உங்கள் மனதில் அமர்ந்து கொண்டு மன நிம்மதியை கெடுக்கிறதோ, அந்த கஷ்டம் சரியாக இந்த ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு 48, ஒரு ரூபாய் நாணயங்கள் தேவை. முதலில் 48, ஒரு ரூபாய் நாணயங்களை ஒரு டப்பாவில் சேகரித்து வையுங்கள். மளிகை கடையில் கேட்டால் கூட சில்லறை காசுகள் உங்களுக்கு சுலபமாக கிடைத்துவிடும். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடவேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றுக் கொள்ளவும். சேகரித்து வைத்திருக்கும் சில்லறை காசுகளில் இருந்து, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வத்தை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். ஒரே ஒரு கோரிக்கையைத்தான் குலதெய்வத்திடம் வைக்க வேண்டும். உங்கள் கஷ்டத்தை மனம் உருகி மனதார, குலதெய்வத்திடம் சொல்லி, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை தனியாக ஒரு டப்பாவில் சேகரித்து வாருங்கள். 48 நாட்களும் ஒவ்வொரு நாணயமாக எடுத்து காலையில், உள்ளங்கையில் வைத்து, வேண்டுதல் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

48 நாட்கள் இந்த பூஜை முடிந்த பிறகு, 48 ஒரு ரூபாய் நாணயங்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா. உங்கள் உள்ளங்கையில் வைத்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்று, வேண்டிய அந்த ஒரு ரூபாய் நாணயங்களை தான தர்ம காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும். 48 ரூபாய்க்கு நிச்சயமாக இரண்டு பேருக்கு காலை உணவு வாங்கித் தர முடியும். அப்படி இல்லை என்றால் பசியில் கஷ்டப்படும் ஒரு ஏழைக்கு  நிறைவான சாப்பாட்டை வாங்கிக் கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பிறரிடம் கொடுத்து ஏமார்ந்த பணம், நகை எல்லாம் திரும்ப பெற பௌர்ணமி அன்று இதை மட்டும் எரித்து விடுங்கள். பணத்தை வாங்கி சென்றவர்களே தேடி வந்து திருப்பித் தரும் அதிசயம் நடக்கும்.

48 நாளும் தவம் போல இந்த பரிகாரத்தை செய்து முடித்து அந்த ரூபாய்க்கு அன்னதானம் செய்தால் உங்கள் மனதில் இருக்கக்கூடிய அந்த கஷ்டம், உங்களைத் தீராமல் துரத்தி வரும் அந்த பிரச்சனை, உங்களை விட்டு நீங்கிவிடும். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களுக்கு இடையை மாதவிடாய் நாட்கள் வந்தால் அந்த நாட்களை தவிர்த்து விட்டு மீண்டும் பரிகாரத்தை தொடரலாம். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்யும்போது கைமேல் பலன் நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -