பஞ்சம் நீக்கும் பஞ்சமி திதி வழிபாடு

varahi1
- Advertisement -

இன்றைக்கு பஞ்சமி திதி. வாராஹி அன்னை வழிபாட்டிற்கு மிக மிக சிறப்பான நாள். இன்று வீட்டில் இருக்கும் பஞ்சம் நீங்குவதற்கு, பண வசியம் ஏற்படுவதற்கு, பின் சொல்லக் கூடிய இந்த பரிகாரத்தை செய்யணும். அதற்கு இன்றைக்கான பண வசிய நேரம் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து வச்சுக்கணும்.

இதோடு சேர்த்து வாராஹித் தாயை நினைத்து எந்த ஒரு பொருளை பீரோவில் வைத்தால் நம் வீட்டில் இருக்கும் பஞ்சம் நீங்கி, பீரோ முழுவதும் பணம் தங்கம் வெள்ளி வைரம் வைடூரியத்தை சேர்த்து வைக்கக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பஞ்சமி திதி பண வசிய நேரம்

இன்று மதியம் 1:12 மணி முதல் 1:30 வரை பண வசிய நேரம். அடுத்து இன்று மதியம் 3:36 மணி முதல் 4:00 மணி வரை பண வசிய நேரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமி திதியோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த பண வசிய நேரத்தை யாரும் தவற விடாதிங்க. இந்த நேரத்தில் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு என்ன வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும்.

இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் இன்றைக்கான பரிகாரத்தை நீங்கள் செய்யணும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான ஒரே ஒரு வசிய பொருள் ஏலக்காய். ஏலக்காய் வாசத்துக்கு மயங்காத நல்ல விஷயங்களே கிடையாது. பணத்தை வசியம் செய்ய கூடிய பொருட்களின் பட்டியலில் முதலிடம் இந்த ஏலக்காய்க்கு உண்டு என்று கூட சொல்லலாம். அதாவது பண வசியம், என்ற வார்த்தைகள் தவறு கிடையாது.

- Advertisement -

பணம் நம் வசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் கிடையாது. மேலே சொல்லப்பட்டிருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் இருக்கும் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை நிறத்தில் இருக்கும் ஏலக்காயை எடுத்து உங்கள். உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். வராகி தாயை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டில் வாராஹி தாயின் படம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, மனதில் வாராகி தாயை நினைப்பதில் எந்த தவறும் கிடையாது.

வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து உள்ளங்கைகளில் ஏலக்காயை வைத்து வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி வீடு செல்வ செழிப்போடு மாறனும் என்று வாராகி தாயை மனதார நினைத்து வேண்டுதல் வையுங்கள் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் பஞ்சம் பஞ்சு பஞ்சாக பறந்து விடும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

வேண்டுதலை முடித்துவிட்டு குலதெய்வத்தையும் வாராகி தாயையும் நினைத்துக் கொண்டு கையில் இருக்கும் ஏலக்காயை கொண்டு போய் பீரோவில் வைத்து விடுங்கள். பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். பணம் வைக்கும் பர்ஸில் வைக்கலாம். அல்லது நீங்கள் நகை வைக்கும் இடத்திலும் இந்த ஏலக்காயை வைக்கலாம். உங்களுடைய விருப்பம் தான்.

அடுத்த பஞ்சமி திதி வரை இந்த ஏலக்காய் அப்படியே இருக்கட்டும். அடுத்த பஞ்சமி திதி வரும்போது இந்த ஏலக்காயை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். பரிகாரம் அவ்வளவுதான். உங்களுக்கு பரிகாரம் செய்த இந்த இடைப்பட்ட காலத்தில் பண கஷ்டத்திற்கு ஒரு விடிகாலம் பிறந்திருக்கிறது, வாராஹி அன்னையை நினைத்து பரிகாரம் செய்ததில் ஒரு திருப்தி இருக்கு, ஒரு நல்லது நடந்திருக்கிறது என்றால், அடுத்த மாதமும் பஞ்சமி திதி அன்று இதே போல ஏலக்காயை எடுத்து வாராஹி தாயை நினைத்து பர்சில் வச்சுக்கோங்க.

இதையும் படிக்கலாமே: ஒன்பது நாளில் கடன் பிரச்சினை தீர பிள்ளையார் வழிபாடு

உங்களுக்கு பிறகு வாழ்நாளில் பணக்கஷ்டமே வராது என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறேன்.

- Advertisement -