நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற பீரோவில் வெள்ளை பேப்பரை இப்படி செய்து வையுங்கள்! தீராத எல்லா தேவைகளும் தீரும்!

murugan-budhan
- Advertisement -

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே ஆசைகள் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆசைகள் இருப்பது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும் இருக்கின்றன. ஆசைகளும், கனவுகளும் நிறைவேற புத்தி காரகனாக விளங்கும் புத பகவானுடைய அருள் வேண்டும். மேலும் உங்கள் குல தெய்வத்தினுடைய அருளும் வேண்டும். தொழில், வியாபாரம் சிறக்க, சொந்த வீடு வாங்க, நினைத்தவர்களை மணந்து கொள்ள இப்படி ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவுகள் நிறைவேற உங்கள் வீட்டு பீரோவில் இப்படி செய்து வைத்தால் போதுமே! நாம் அப்படி என்ன தான் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

praying

நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் அறிவுடையதாகவும், சாதுர்யத்துடனும் கையாள கற்றுக் கொடுப்பது புதன் பகவான் ஆவார். சாதுரியமாக செயல்படுவதன் மூலம் தான் நம்முடைய தேவைகளை நம்மால் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். மேலும் வருமானம் பெருகவும், தொழில் வளம் சிறக்கவும் செய்ய வேண்டிய இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நாம் நினைத்ததை அடையலாம்.

- Advertisement -

எப்பொழுதும் நாம் மனதில் என்ன தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறோமோ! அதுவே நமக்கு நிஜத்திலும் நடக்கும். சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்தால் பத்தாது. அதை அடைவதற்கான லட்சியத்தை நோக்கி தொடர்ந்து நாம் எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் என்றாவது ஒருநாள் அந்த கனவானது பலிக்கும். நம்மால் முடியும், முடியாது என்பது அடுத்த விஷயம். ஆனால் அதற்காக நாம் என்ன செய்கிறோம்? என்பது தான் மிகவும் முக்கியம்.

budhan

நினைத்ததை அடைய வைராக்கியம் தேவை. வைராக்கியத்துடன் நாம் அதை அடைந்தே தீருவோம் என்கிற முனைப்புடன் தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படும் பொழுது தான் நம்முடைய கனவுகள் விரைவாகவே நிறைவேறும். அந்த வகையில் புத பகவானுடைய அருளுடன் நாம் செய்ய இருக்கும் இந்த பரிகாரம் மூலம் நினைத்ததை அடையலாம். புத பகவானுக்கு உகந்த நிறம் பச்சை நிறம் ஆகும். இந்த பச்சை நிறம் பணத்தை ஈர்க்கக் கூடிய ஆற்றலையும் படைத்துள்ளது.

- Advertisement -

உங்களுடைய குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாமல் உங்களால் எதையுமே செய்ய முடியாது. குலதெய்வ அருள் இருந்தால் எதை வேண்டுமானாலும் ஒரு மனிதன் சாதித்து காட்ட முடியும், எனவே உங்களுடைய குலதெய்வ படத்திற்கு முன்பு பூஜை அறையில் ஒரு பச்சை நிற பட்டுத் துணியை விரித்து கொள்ளுங்கள். அதில் நான்கு பக்கமும் மஞ்சள் குழைத்து பத்திரிக்கைக்கு பொட்டு வைப்பது போல வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் ஆசைகளை பற்றிய வேண்டுதல்களை எழுதிக் கொள்ளுங்கள்.

rolled paper

யாருக்கு என்ன வேண்டுமோ அவர்கள் கைகளால் எழுதுவது தான் முறையாகும். உதாரணத்திற்கு நான் சொந்த வீடு விரைவாக கட்ட வேண்டும் என்கிற வேண்டுதலை அப்படியே எழுதி நான்காக மடித்து அந்த பச்சை துணியின் மீது வைக்கவும். பின்னர் குலதெய்வ மந்திரத்தை உச்சரித்து விட்டு அந்த துணியை மூட்டையாக முடிந்து கொள்ளுங்கள். குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் அல்லது குலதெய்வம் யார் என்றே தெரியாதவர்கள் முருகப் பெருமானை குல தெய்வமாக நினைத்து வழிபடலாம் அல்லது காமாட்சி அம்மனை குல தெய்வமாக நினைத்து விளக்கிற்கு முன்பு இது போல் செய்து கொள்ளலாம். முருகன் மந்திரங்கள், காமாட்சி மந்திரங்கள் உச்சரிக்கலாம்.

பின்னர் அதனை அப்படியே எடுத்து கொண்டு போய் உங்களுடைய பீரோவில் லாக்கர் பகுதியில் ஒரு கண்ணாடி பௌலில் வைத்து விடுங்கள். பிறகு தொடர்ந்து பூஜைகள் செய்யும் பொழுது பீரோவை திறந்து அதற்கும் கற்பூர ஆரத்தி காண்பித்து வாருங்கள். இப்படி செய்ய விரைவாகவே உங்களுடைய கனவுகள் நிறைவேறும். ஒரு கனவு நிறைவேறிய பின்பு மீண்டும் அதை செய்து வைக்கலாம். நீண்ட நாள் கனவு என்றால் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்து மீண்டும் இதே போல செய்து அதே கண்ணாடி பாத்திரத்தில் வைக்கலாம். இந்த பரிகாரத்தை புதன் கிழமைகளில் தான் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -