நீங்கள் என்ன நினைத்தாலும் நினைத்த நொடியில் அது நிறைவேற ஒரு கைப்பிடி வெந்தயத்தை வைத்து இதை மட்டும் செய்து பாருங்கள். நினைத்தவை யாவும் நிறைவேற எளிய பரிகாரம்.

ninaithathu nadakka
- Advertisement -

ஒவ்வொருவரின் வாழ்விலும் பலவிதமான ஆசைகள் இருக்கும். ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் பல வழிகளில் போராடித் தான் பெற வேண்டி இருக்கிறது. அப்படி போராடினாலும் கூட எல்லா ஆசைகளும் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். இது போன்ற சூழ்நிலைகளை எளிதில் கையாள ஆன்மீகம் நமக்கு ஒரு எளிதான பரிகாரத்தை தந்திருக்கிறது அது என்னவென்று இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நினைத்த காரியங்கள் கைகூட பரிகாரம்
நாம் நினைத்த காரியங்கள் எல்லாம் நினைத்தது போலவே நிறைவேற கிரகங்களின் அனுகிரகம் தேவை. அதிலும் நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நிறைவேற குரு பகவான் உடைய அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும். ஆகையால் இந்த பரிகாரத்தையும் நாம் குரு பகவானுக்கு உகந்த பொருளான வெந்தயத்தை வைத்து தான் செய்ய போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமைகளில் குரு ஓரைகளில் செய்ய வேண்டும். அதாவது வியாழக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு, மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டிலிருந்து ஒன்பது இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் தேர்வு செய்து இந்த பரிகாரத்தை செய்ய பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு மஞ்சள் நிற காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை வைத்து உங்களிடம் இருக்கும் சின்ன தங்கம் அல்லது வெள்ளி ஏதேனும் ஒன்றை இதில் வைத்து முடிச்சாக கட்ட வேண்டும். இந்த முடிச்சை கட்டும் போது நீங்கள் எந்த ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டும் அல்லது உங்களில் எந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது மனதார நடக்க வேண்டும் வேண்டிக் கொண்டு கட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த முடிச்சை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். இந்த முடிச்சிற்கு தினந்தோறும் கற்பூர தீபாராதனை காட்டி வாருங்கள். ஒவ்வொரு முறை கற்பூர தீபாரதனை காட்டும் போது உங்களுடைய அந்த வேண்டுதலை திரும்பத் திரும்ப சொல்லி நிறைவேற்றித் தாருங்கள் என்று ஆணித்தரமாக வேண்ட வேண்டும். இதை செய்த சிறிது நாட்களுக்குள்ளாகவே நீங்கள் நினைத்த காரியம் உங்களுக்கு கைகூடி இருக்கும்.

அதன் பிறகு இந்த முடிச்சில் இருக்கும் தங்கம் அல்லது வெள்ளி நீங்கள் எதை வைத்தீர்களோ அதை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வெந்தியத்தை கால் படாத இடத்தில் அல்லது செடிகளுக்கு இடையே தூவி விடுங்கள். மறுபடியும் இதே போன்றதொரு முடிச்சை கட்டி வைத்து வேறு ஒரு வேண்டுதலை நீங்கள் வேண்டிக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: முருகப்பெருமானை இந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் வீடு மனை சொத்து பேர் புகழ் இவையெல்லாம் நமக்கு கிடைத்து ஓகோவென்று ராஜ வாழ்க்கை வாழலாம்.

இப்படி உங்கள் வாழ்வில் எப்போது எது நடக்க வேண்டும் என்று மனதார நீங்கள் நினைத்து இந்த முடிச்சு பரிகாரத்தை செய்தாலும் அது நிச்சயம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வெந்தய முடிச்சு பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -