முருகப்பெருமானை இந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் வீடு மனை சொத்து பேர் புகழ் இவையெல்லாம் நமக்கு கிடைத்து ஓகோவென்று ராஜ வாழ்க்கை வாழலாம்.

murugan-astro
- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் நன்றாக இருப்பதற்கு அவருக்கு குருவின் பரிபூரணமான அருள் கிடைக்க வேண்டும். அதே போல் கடன் தொந்தரவுகள் ஏதும் இன்றி வீடு, மனை, வாசலோடு வாழ்வதற்கு செவ்வாயின் அனுகிரக பார்வையும் வேண்டும். அப்படிப்பட்ட இவர்கள் இருவரின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு எந்த தெய்வத்தை நாம் வழிபட வேண்டும் என்று தான் இந்த தான் ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேவர்களைக் காத்து அசுரனை வதம் செய்வதற்காக தோன்றியவரே முருகப் பெருமான். இவர் செவ்வாய் கிரகத்திற்குரிய அதிபதியாக விளங்குகிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமான் குருவாக காட்சி தரும் ஸ்தலமே திருச்செந்தூர். திருச்செந்தூர் சென்றால் திருப்பங்கள் நிகழும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட அற்புதமான ஸ்தலத்தில் முறையான வழிபாடு செய்வதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ராஜ வாழ்க்கை வாழ முருகன் வழிபாடு
நம்முடைய பிறந்த நட்சத்திரம் நாளில் திருச்செந்தூருக்கு செல்ல வேண்டும். அன்றைய நாளில் முருகப்பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், விபூதி போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு அங்கு தரும் இலை பிரசாதத்தை வாங்கிக் கொண்டு, கோவிலை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும் போது சத்ரு சம்கார சன்னதி என்று வரும். அந்த சன்னதியில் சிறிது நேரம் அமர்ந்து நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பகைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக வள்ளி தெய்வானை சன்னதி வரும். தெய்வானை சன்னதியில் அம்பாளிடம் செல்வ செழிப்பு ஏற்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். வள்ளி சன்னதியிலும் நம்முடைய வேண்டுதலை வேண்டிக் கொள்ள வேண்டும்.பிறகு அந்த ஸ்தலத்தில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு நாம் மஞ்சள் நிற வஸ்திரத்தை அணிவிக்க வேண்டும். மேலும் கொண்டைக்கடலை மாலையை அவருக்கு அணிவிக்க வேண்டும். பிறகு நம்முடைய பெயர், ராசி, நட்சத்திரத்திற்கு அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு முருகனின் மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

“ஓம் ஸௌம் சரவண பவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ”

என்பதை மனதார ஜெபிக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நமக்கு சத்ரு சம்ஹாரம் ஏற்படும். மேலும் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைப்பதால் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவோம்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை இதை மட்டும் தவறாமல் செய்யுங்கள் போதும். உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் ஒரு துளி அளவும் குறையாது. நாளுக்கு நாள் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

திருச்செந்தூர் முருகனை இப்படி வணங்குவதன் மூலமாக நமக்கு சொந்தமாக வீடு மனை வாங்கும் யோகம் உண்டாக்கும். சொத்துக்கள் சேரும். மேலும் குரு பகவானின் அருள் இருப்பதால், நமக்கு வெற்றிகள் அதிகரிக்கும். செல்வ செழிப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -