நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற, காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இதை மட்டும் பார்த்து விடுங்கள். இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் அதிசயம் நடக்கும்

wake up
- Advertisement -

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள், ஆசைகள் உண்டு. அது அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளத் தான் நாம் இத்தனை பாடுபட்டு உழைத்து கொண்டு இருக்கிறோம். இப்படி உழைப்பதால் மட்டும் எல்லா ஆசைகளும் நடந்து விடாது. ஏதாவது ஒன்று நடக்கும், அவ்வளவு தான். இன்னும் சிலருக்கு நினைத்த விஷயங்கள் ஒன்று கூட நடக்காமல் அனைத்தும் தடங்கலாகவே போய்க் கொண்டிருக்கும். அப்படியானவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நினைப்பது எல்லாம் நடக்க கூடிய வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை தான். ஆனால் சிலர் தொட்ட காரியம் எல்லாமே தடங்கலாக இருக்கும். வீடு கட்ட ஆரம்பித்தால் எழும்பி பாதையிலே நின்று விடும். வேலையெல்லாம் முடித்த பிறகும் அங்கிருந்து பணம் வராது. இது போல எந்த ஒரு சுபகாரியங்களாக இருக்கட்டும் அல்லது வேலையாக இருக்கட்டும் ஆரம்பித்த உடனே அந்த வேலைகள் அனைத்தும் பாதியிலே நின்று விடும். இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய மஞ்சள் அரளி பூவை எடுத்து கொள்ளுங்கள். அரளியிலே பல வகை உண்டு அவையெல்லாம் பயன்படுத்தக் கூடாது. மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த அரளிப் பூவை மட்டும் தான் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். இதை தங்க அரளி பூ என்றும்  கூறுவார்கள். இந்த அரளி பூவில் 21 பூக்களை எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பூக்களை எல்லாம் நல்ல பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் படுக்கை அறையில் நீங்கள் தூங்கி எழும் போது பார்க்கும் வகையில், அரைத்த பேஸ்ட்டை வைத்து 369 என்ற எண்ணை எழுதி வைத்து விடுங்கள்.

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன், 369 என்கிற இந்த எண்ணை பார்த்து உங்கள் மனதில் என்ன ஆசை நிறைவேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதை ஒரு கணம் நினைத்து நடக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அடுத்த வேலையை நீங்கள் பார்க்கத் தொடங்கலாம்.

- Advertisement -

ஒரு முறை இப்படி எழுதிய இந்த எண்களை 21 நாட்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும். அதற்குள்ளாக நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஒரு வேளை அது நடக்க சற்று தாமதமானால், அடுத்து இதே போல பூக்களை பறித்து அரைத்து இந்த எண்ணை மறுபடியும் எழுதி 21 நாட்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும்.

நீங்கள் நினைத்த காரியங்கள் முதல் 21 நாட்களிலே கட்டாயமாக நடந்து விடும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வேளை நடப்பதற்கான வாய்ப்புகள் தொடங்கி முடியாமல் இருந்தால் மறுபடியும் எழுதி இது போல செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க வாழ்க்கை பாவக்காய் போல கசப்பாக தெரிகிறதா? கரும்பு போல இனிப்பாக மாற செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இதை செய்தால் உங்கள் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையுமே!

இந்த பரிகாரத்தை பௌர்ணமி நாளில் தொடங்கினால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தங்கப் பூ, 3 6 9 என்ற பிரபஞ்ச எண் இவை இரண்டும் இணைந்து உங்களின் ஆசைகள், தேவைகள், தடைபட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -