நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடிய பரிகாரம்

aanthai
- Advertisement -

சில பொருட்களுக்கு எல்லாம் அதிர்ஷ்டத்தை அபரிவிதமாக வெளிப்படுத்தக்கூடிய தன்மை இருக்கும். நாம் நினைத்ததை உடனே நடத்திக் கொடுக்கக்கூடிய சக்தியும் அந்த பொருளுக்கு இருக்கும். அந்த வரிசையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடிய, நினைத்ததை நடத்தி தரக்கூடிய ஒரு அதிர்ஷ்டம் வாய்ந்த போட்டோவை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரு நல்ல காரியம் நடக்கணும். அது ஒரு நாளில் நடக்கலாம், அல்லது இரண்டு நாளில் நடக்கலாம், அல்லது ஒரு வாரத்துக்குள்ளாகவாவது இந்த ஒரு நல்ல காரியம் நடந்து விட வேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். கூடவே உங்களுடைய முயற்சிக்கு வெற்றியை கொடுக்க இந்த ஒரு சின்ன புகைப்படத்தையும் உங்க கையில் வச்சுக்கோங்க. அது என்ன புகைப்படம், ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க

ஆந்தையின் படம் தான் அது. ஆந்தை என்றால் சில பேருக்கு பயம் இருக்கும். ஆந்தையை துரதிஷ்டம் என்றும் சில பேர் சொல்லுவார்கள். ஆனால் ஆந்தை அதிர்ஷ்டத்திற்கு உரிய ஒரு பறவை. உங்களுடைய மொபைல் போன் டிபி யாக கூட ஆந்தையை வச்சுக்கலாம். சின்ன ஆந்தை போட்டோவ பாக்கெட்ல வச்சுக்கோங்க.

உங்கள் வீட்டில் வரவேற்பு அறையில் ஆந்தை போட்டோவை மாட்டி வையுங்க. நாளைக்கு இந்த நல்ல காரியம் நடக்கணும்னு நினைக்கும் போது, இந்த ஆந்தையை பாருங்க. அடிக்கடி இந்த ஆந்தைய பாத்துகிட்டு, நடக்கக்கூடிய நல்ல காரியத்தை மனதில் நினைக்கும் போது, அந்த காரியம் நிச்சயம் கூடிய சீக்கிரத்தில் நடந்து விடும்.

- Advertisement -

இது ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். சின்னதா ஒரு டெஸ்ட் வச்சுக்கோங்க. இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து முக்கியமான ஒரு வேலை இருக்கும்போது, இன்று இந்த பரிகாரத்தை நீங்கள் சோதித்துக் கூட பார்க்கலாம். இரண்டு மூன்று நாட்கள் கழித்து உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது நிச்சயம் நல்லபடியாக நடக்கும்.

இதையும் படிக்கலாமே: காரிய சித்தி உண்டாக மந்திரம்

பலமுறை முயற்சி செய்தும் ஒரு காரியம் உங்களுக்கு சக்சஸ் ஆகல. ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யப் போகிறீர்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ‘அந்த காரியம் சக்சஸ் ஆக வேண்டும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அடிக்கடி ஆந்தையை பாருங்கள். மொபைலில் டிபி வச்சுட்டா கேட்கவே வேணாம். நீங்க அதை பார்த்துக்கொண்டே தான் இருப்பீங்க.

நிச்சயமாக ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை வாரி தரக்கூடிய சக்தி இதில் இருக்கு. நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. நல்லது நடந்தால் லாபம். கெட்டது நடக்க வாய்ப்பு இல்லை என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -