தீய சக்திகளை போக்கும் கோவில்

angalamman
- Advertisement -

நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்கள் மற்றும் கஷ்டங்களுக்கு காரணம் நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகளும், துர் சக்திகளும், கண் திருஷ்டிகளுமே ஆகும். இப்படிப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம்மிடம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதற்கு உக்கிரமான தெய்வங்களை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் முறையாக வழிப்பட்டால் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகும் என்பது ஒரு ஐதீகம். அதிலும் குறிப்பாக பெண் தெய்வங்கள் சிறப்பு மிகுந்தவர்களாக திகழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக சில பெண் தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகிவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் கோவில்தான் மேல்மலையனூர். மேல்மலையனூரில் கோவில் கொண்டிருக்கும் தெய்வமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விளக்குகிறார். இந்த கோவிலில் மாதா மாதம் வரும் அமாவாசை நாளன்று இரவு 12 மணிக்கு ஊஞ்சல் வைபோகம் நடைபெறும். அன்றைய தினம் அம்மனை சென்று வழிபடுவது என்பது மிகவும் சிரமத்திற்குரியதாக இருக்கும். காரணம் அன்றைய தினம் கூட்டம் அலைமோதும் என்பதுதான்.

இப்படி விசேஷம் இல்லாத நாளாக ஒரு நாள் பார்த்து மேல்மலையனூருக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஆறு எலுமிச்சம் கனிகளை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த எலுமிச்சம் பழமானது எந்தவித கருப்பு புள்ளிகளும் இல்லாத நல்ல பழமாக இருக்க வேண்டும். இந்த பழத்தை நம் கைகளால் அம்மனின் மடியில் வைத்து மனதார வழிபட வேண்டும். அந்த பழங்களை திரும்ப வாங்க கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தீபம் ஏற்றி வைத்து அம்மனை வழிபட்ட பிறகு அந்த கோவிலில் சன்னி முனிவர் மேடை என்று ஒன்று இருக்கிறது. அந்த மேடையில் குறைந்தது ஐந்து நிமிடமாவது அமர வேண்டும். யார் ஒருவர் அந்த மேடையில் அமர்கிறார்களோ அவர்களிடம் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள், துர்சக்திகள், தீய சக்திகள், கண் திருஷ்டி இன்னும் பிற எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது அனுபவ பூர்வமாக கண்ட உண்மை.

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும் பொழுதெல்லாம் இந்த கோவிலுக்கு சென்று இந்த முறையில் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். இந்த தடைகள் எதன் காரணமாக வந்தாலும் அது விலகி விடும்.

இதையும் படிக்கலாமே: 2024-ல் சிறப்பாக இருக்க செல்ல வேண்டிய கோவில்கள்

ஆலய வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் தங்களிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும்.

- Advertisement -