24 மணி நேரத்திற்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். விதியால் நடக்கக்கூடாது என்று எழுதி இருந்தாலும், அது நிச்சயம் மாற்றப்படும். இதை மட்டும் உங்களுடைய கையில் எழுதினால்.

vishnu
- Advertisement -

அட, நம்பிக்கை தாங்க வாழ்க்கை. நடக்கும் என்றால் அது நிச்சயம் நடக்கும். நடக்காது என்றால் அது நிச்சயம் நடக்காது. இந்த நல்ல விஷயம், நிச்சயம் உங்களுக்கு நடக்கும் என்று விதியில், உங்களுடைய தலையெழுத்தில் எழுதி இருக்கும். ஆனால் நீங்க என்ன செய்வீங்க. அந்த நல்லது நடக்காது நடக்காது என்று நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். விதியால் நடக்கக்கூடிய நல்லது கூட உங்களுக்கு நடக்காமல் போய்விடும். உங்களுடைய தலையெழுத்தில் இந்த கெட்டது நிச்சயம் நடக்காது என்று எழுதியிருக்கும். ஆனால் நீங்கள் நடக்கும் என்று யோசித்தால் நிச்சயம் அந்த கெட்ட து உங்களுக்கு நடந்தே தீரும். இதை படிப்பதற்கு கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் விஷயம் தெரிந்தவர்கள் இதை நிச்சயமாக புரிந்து கொள்வார்கள். இந்த நல்லது எனக்கு நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

நினைத்தது நல்லபடியாக நடக்க பரிகாரம்:
இன்று நாம் பார்க்கக் கூடிய பரிகாரம் முழு நம்பிக்கையோடு ஒரு மனிதன் செய்ய வேண்டிய பரிகாரம். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதை செய்யுங்கள். நம்பிக்கை இல்லை என்றால் இதை செய்யாதீங்க. நிறைய விஷயங்கள் நமக்கு நெகட்டிவாவே நடந்துகிட்டு இருக்கு. இன்றைக்கு காலையில் எழுந்து முக்கியமான வேலைக்காக வெளியே செல்ல போகின்றோம்.

- Advertisement -

உதாரணத்திற்கு உடல்நிலை சரியில்லை. டெஸ்ட்க்கு ஸ்கேன் எடுத்தாச்சு. ரிப்போர்ட் வரவில்லை. பெரிய அளவில் பிரச்சனை இருக்கும் என்ற பயம் நம் மனதில் இருக்கிறது. இன்று ரிசல்ட் வாங்க டாக்டர் கிட்ட போறீங்க இக்கட்டான சூழ்நிலை உயிர் போகும் பிரச்சனை என்றே வைத்துக் கொள்வோம். காலையிலிருந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு ஒரு நீல நிற பேனாவை எடுத்து உள்ளங்கைகளில் ‘கிலீம்’ என்ற வார்த்தையை எழுதி விட்டு உங்கள் வேலையை பார்க்க செல்லுங்கள். நிச்சயம் நல்லது மட்டும்தான் உங்களுக்கு நடக்கும் என்ற நம்பிக்கையோடு இதை எழுதுங்கள்.

ஹாஸ்பிடலுக்கு போறீங்க ரிப்போர்ட் வாங்குறீங்க. உயிர் போற பிரச்சனை எதுவுமே இல்லை சின்ன பிரச்சனை தான். பத்து நாட்கள் இந்த மாத்திரையை சாப்பிட்டால் நீங்கள் குணமாகி விடுவீர்கள் என்று டாக்டர் ரிசல்ட்டை கொடுத்து விடுவார்கள். இது ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்டுள்ள விஷயம். இதுபோல பல பிரச்சினைகள் நம் வாழ்க்கையில் இருக்கிறது.

- Advertisement -

வேறு ஒரு உதாரணத்திற்கு. வேலையே இல்லை. அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லை. இந்த இன்டர்வியூக்கு போய் செலக்ட் ஆன மாசம் 50,000 சம்பளம். இந்த பரிகாரத்தை செய்யுங்கள். வேலை கிடைக்கும் என்று நம்புங்கள். உங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். உள்ளங்கையில் இதை எழுதி வைத்தால் யாராவது பார்ப்பாங்களே என்ற கஷ்டம் உங்களுக்கு தெரிந்தால் சட்டைக்கு உள்பக்கம், கைக்கு மேல் பகுதியில் எழுதலாம். வாட்ச் கட்டும் இடத்தில் இந்த வார்த்தையை எழுதி அதன் மேலே வாட்ச் கட்டிக் கொள்ளலாம் அல்லது அதன் மேலே வளையல் கூட போட்டுக் கொள்ளலாம் பெண்கள். இப்படி ஏதாவது ஒரு இடத்தில் உங்களுடைய உடம்பில் இந்த வார்த்தை இருந்தால் சகல விதமான நன்மைகளும் உங்களை தேடி வரும்.

கடன் வாங்க போகும்போது, அல்லது பெண்பார்க்கப் போகும்போது, அல்லது புதுசாக அப்ளிகேஷன் போடுறீங்க, இந்த படிப்பு, டாக்டர் ஆக வேண்டும். இன்ஜினியராக வேண்டும், என்ற கனவு சில பேருக்கு இருக்கும் அதற்காக முயற்சிகளை மேற்கொள்ளும் போது கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். சொத்து பதிவு செய்ய செல்லும்போது, உங்களுடைய விருப்பம் தான். உங்களுடைய தேவைகளுக்கு இந்த வார்த்தை எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்லதுக்கு மட்டும்தான் இந்த வார்த்தை பயன்படும். அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை 23/7/2023 ஆடி ஞாயிறு இந்த தானம் செய்ய மறக்காதீர்கள்! கோடி புண்ணியம் தரும் தானம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் தெரியுமா?

சரிங்க இந்த ‘க்லீம்’ என்ற பீஜ மந்திரத்திற்கு பின்னால் என்ன அர்த்தம் இருக்கிறது. விஷ்ணு பகவான், லட்சுமிதேவி, அம்பாள், இப்படி அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும் இந்த மூன்று வார்த்தையில் அடங்கி இருக்கிறது. பணம் பெயர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு வசீகரத்தன்மை இப்படி அனைத்து விதமான நன்மைகளையும் உங்கள் கூட அழைத்து வரக்கூடிய சக்தியும் இதற்கு இருக்கிறது. இந்த மூன்று வார்த்தைக்குள் இத்தனை நன்மைகளும் அடக்கம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறவும்.

- Advertisement -