நினைத்தது நடக்க எருக்கம் பூ பரிகாரம்

erukkam-poo-manthiram
- Advertisement -

நினைத்த காரியங்கள் யாவும் நடக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது உண்டு. இந்த தேவையானது அவரவர் விருப்பத்தை பொறுத்து இருக்கும். ஒரு சிலருக்கு பணத் தேவை இருக்கும். ஒரு சிலருக்கு வேலை தேவை இருக்கும். இன்னும் சிலருக்கு வீடு திருமணம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தேவைகள் இருக்கும்.

இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தான் நம்முடைய உழைப்பு, முயற்சி, வழிபாடு, பரிகாரம் எல்லாம் இருக்கும். அந்த வகையில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு பரிகார முறை தான் இது. இந்த பரிகாரத்தை முறைப்படி செய்யும் போது நம்முடைய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு வழிபாடும், பரிகாரங்களும் செய்வதற்கு என சில நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அது போல நம்முடைய எண்ணங்களை நிறைவேற்றி தரக்கூடிய இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது சிறந்த பலனை தரும். அதுவும் செவ்வாய்க்கிழமை காலை வேளையில் செய்வது இன்னும் அதிக பலனை தருவதாக இருக்கும்.

இந்த பரிகாரம் செய்வதற்கு செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு எருக்கம் பூ இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் இது தான் மிகவும் முக்கியம். அங்கு சென்ற பிறகு ஒரு எருக்கம் இலையை கிழக்கு நோக்கி நின்று பறித்து கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த விதமான தேவையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

- Advertisement -

ஓம் கட விகட கோர ரூபிணி இன்னார் ஸ்வாகா

இந்த மந்திரத்தை நீங்கள் ஏழு முறை சொல்லி ஏழு முறை ஊத வேண்டும். அதாவது இந்த மந்திரத்தில் இன்னார் என்று போட்டு இருக்க கூடிய இடத்தில் யாருடைய மகன் நீங்கள் என்ற பெயரை சொல்லி இந்த வேண்டுதலை எனக்கு நிறைவேற்றி வை என்ற கட்டளையுடன் சொல்ல வேண்டும்.

- Advertisement -

அதாவது உங்களுக்கு பண தேவை எனில் இந்த மந்திரத்தை சொல்லி இன்னார் என்று வரும் இடத்தில் உங்களுடைய தகப்பனார் பெயரை சொல்லி அவருடைய மகனான எனக்கு பணத்தை வர செய் ஸ்வாகா என்று படி சொல்ல வேண்டும். இந்த பரிகார முறையில் மந்திரத்தை சொல்வது தான் மிகவும் முக்கியம். ஆகையால் மந்திரத்தை சரியான முறையில் சொல்லுங்கள்.

இதை சொல்லிய பிறகு இந்த எருக்கம் பூவை ஓடும் நீரில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும். அதே போல் இந்த பரிகாரத்தை செய்ய தனியாகத் தான் செல்ல வேண்டும். மற்றவர்களை உடன் அழைத்துக் கொண்டு செல்லாதீர்கள். இந்த மந்திரத்தோடு நீங்கள் கொடுக்கும் இந்த கட்டளை உங்கள் வேண்டுதலை இந்தப் பிரபஞ்சம் உடனே நிறைவேற்றி தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய பெற்றோருக்கு செய்ய வேண்டிது

எந்த ஒரு வழிப்பாடும், பரிகாரமும் நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்கான பலனை பெறலாம். அப்படி செய்ய கூடிய ஒரு பரிகாரம் முறை தான் இதுவும். நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -