சொந்த வீடு அமைய பெற்றோருக்கு செய்ய வேண்டிது

sevvai patha poojai bhoomi poojai
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் கனவும் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது தான். சொந்த வீடு என்பது எத்தனை பெரிய விஷயம் என்பது வாடகை வீட்டில் தினம் தினம் துன்பப்படுபவர்கள் மட்டும் தான் தெரியும். இது ஒரு புறம் இருக்க, இன்னும் சிலர் எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு நிலத்தை வாங்கி இருப்பார்கள். ஆனால் அந்த நிலத்தில் வீடு கட்ட முடியாது.

இன்னும் சிலருக்கு வீடு கட்டி பாதி வேலை முடிந்திருக்கும் மறுபடியும் அதைத் தொடர முடியாது. இப்படி வீடு நிலம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவை சரியாகவும் சொந்த வீடு இல்லாதவர்கள் சொந்த வீட்டில் வாழக் கூடிய யோகத்தை பெறவும் ஒரு பரிகாரம் உண்டு. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

சொந்த வீடு அமைய பரிகாரம்

ஒருவருக்கு சொந்த வீடு அமையவும் சொந்தமாக நிலம் வாங்க கூடிய யோகத்தை தருவது அவருடைய ஜாதகத்தில் உள்ள நான்காம் இடம் தான். இந்த நான்காம் இடமானது செவ்வாய் கிரகத்திற்கு உரியதாக சொல்லப்படுகிறது. நம்முடைய ஜாதக கட்டத்தில் நான்காவது இடத்தில் பாவ கிரகங்களோ அல்லது அந்த இடத்தில் இருக்க வேண்டிய கிரகம் நீட்சி அடைந்திருந்தாலும் சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் அமையாது என்று சொல்லப்படுகிறது.

ஆகவே வீடு கட்ட வேண்டும் சொந்த நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முன்பாக உங்களுடைய ஜாதகத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நான்காம் இடம் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை ஒரே ஒரு முறை செய்தால் போதும். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

நான்காம் இடமானது எப்படி செவ்வாய் கிரகமோ, அதே போல ஒருவருக்கு அது தாய் தந்தையர் காண ஸ்தானத்தை கொடுக்கக் கூடிய இடமாக சொல்லப்படுகிறது. அப்படியானால் அவர்களின் ஆசிர்வாதம் நமக்கு இருந்தால் இந்த தோஷம் நீங்கி வீடு கட்டும் யோகம் அமையும் என்று சொல்லப்படுகிறது. அதற்கும் சில வழிமுறைகளை நாம் செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் பிறந்த நட்சத்திரம் என்ற ஒன்று இருக்கும் அதை ஜென்ம நட்சத்திரம் என்று சொல்வார்கள். அந்த நட்சத்திரம் வரும் நாள் அன்று தாய் தந்தையரை அமர வைத்து அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும். சந்தனம், மஞ்சள், குங்குமம், வாசனை திரவியங்களை கொண்டு பாத பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -

அதே போல் கொஞ்சம் அட்சதைகளை தயார் செய்து வைத்துக் கொண்டு வெற்றிலை, பாக்கு, பழம் என்று தெய்வத்தை எப்படி வணங்குவோமோ அது போல வணங்க வேண்டும். இப்படி நாம் அவர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கிய பிறகு அவர்கள் அந்த அட்சதையை நம் மீது தூவியும், பாத பூஜை செய்த தண்ணீரை நம் மீதும் தெளித்தால் நம்முடைய இந்த கிரக தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு சிலருக்கு தாய் தந்தையரில் யாரேனும் ஒருவர் இருப்பார்கள். மற்றொருவர் இருக்க மாட்டார்கள். அப்படியான பட்சத்தில் அவர்களுக்கு பதில் ஒரு செங்கலை வைத்து அவர்களை இதே போல பாவித்து வழிபாடு செய்யலாம். இந்த இரண்டு பேரும் இல்லாதவர்கள் தங்களுடைய சொந்தத்தில், தெரிந்தவர்களில் யாரையேனும் தாய் தந்தையராக பாவித்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சிலர் நிலம் வாங்கி போட்டு அதில் வீடு கட்ட முடியாமல் உள்ளவர்கள் கட்டிய வீடு பாதையில் இருக்கும் நிலையில் உள்ளவர்கள் பாத பூஜை செய்த தண்ணீரை கொண்டு அந்த இடத்தில் தெளிக்க வேண்டும். உடனே அங்கு கட்டடம் எழும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: முக வசியம் தரும் கல் உப்பு

சொந்த வீடு கட்டவும் வாங்கிய நிலத்தில் வீடு கட்டி அமோகமாக வாழவும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுடன் இந்த பரிகாரத்தையும் சேர்த்து செய்தால் பலனை விரைவில் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -