வேண்டுதல் நிறைவேற வாராகி வழிபாடு

varahi vazhipadu
- Advertisement -

பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் தெய்வங்கள் வாராகி அன்னையும் ஒருவர். அன்னையின் முன்பாக மனம் உருகி நின்று கண்ணீர் மலர வேண்டினாலே போதும் உங்கள் துன்பம் அனைத்தும் தூர ஓடிவிடும் அந்த அளவிற்கு தாயை போல் பிள்ளையை அரவணைக்கும் கருணை குணம் கொண்டவர் தான் வாராகி அன்னை.

இந்த அன்னையை வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி உகந்தது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எப்படி தெய்வங்களுக்கு உகந்த நாட்கள் என்று இருக்கிறதோ அதே போல தெய்வங்களுக்கு உகந்த பொருட்கள் என சிலை இருக்கிறது. அவற்றைக் கொண்டு அவர்களை நாம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல் உடனே நிறைவேறும்.

- Advertisement -

அப்படி வாராகி அன்னையை இந்த ஒரு பொருளைக் கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல் உடனே நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வேண்டுதல் நிறைவேற வாராகி அன்னை வழிபாடு

இந்த வழிபாட்டை வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் தொடங்குங்கள் அல்லது பஞ்சமி திதியில் தொடங்கினால் இன்னும் விசேஷமான பலனை பெறலாம். இந்த வழிபாட்டை நீங்கள் ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும் என்றில்லை, அன்னையை நினைத்து உங்கள் வீட்டு பூஜை அறையிலே கூட இதை செய்யலாம்.

- Advertisement -

இந்த பூஜையை துவங்கும் நாள் அன்று காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையிலே குளித்து முடித்து விடுங்கள். வாராகி அன்னையின் திருவுருவப் படம் இருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி மாலை சூட்டி அலங்காரம் செய்து விடுங்கள். நல்ல மணம் மிக்க சாம்பிராணி ஊதுபத்திகளை ஏற்றி அன்னையை மகிழ்விக்கும் விதமாக பூஜையை தொடங்குங்கள்.

இப்போது ஒரு சிறிய தட்டில் பச்சை பயிரை பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு அகல் விளக்கை வையுங்கள். இந்த அகல் விளக்கு பஞ்சமுக விளக்காக இருந்தால் மிகவும் விஷேசம். அது இல்லாத பட்சத்தில் ஒரு அகல் ஏற்றினாலும் தவறில்லை. அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அன்னையை மனதார வேண்டி தீபம் ஏற்றங்கள்.

- Advertisement -

தீபம் ஏற்றிய பிறகு அன்னையை மனதில் நிறுத்தி உங்கள் வேண்டுதல் எதுவோ அதை நிறைவேற வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் வாராகி அன்னையின் ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் என எது தெரியுமோ அதை படிக்கலாம். இந்த தீபத்தை ஒன்பது நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். இதை இடையில் ஒரு நாட்கள் கூட தவற விடக் கூடாது. இது மிகவும் கவனமாக செய்ய வேண்டியது வழிபாடு.

பெண்கள் இந்த வழிபாட்டை செய்யும் போது தங்களுக்கான மாதவிலக்கு நாட்கள் முடிந்த பிறகு தொடர்ந்தால் நல்லது. 9 நாட்களும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் முதலில் வாராகி அன்னைக்கு இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்தவுடன் உங்கள் மற்ற வேலைகளை செய்யுங்கள். இந்த 9 நாட்களுக்குள் உங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் பெருகும் அன்னைக்கு தீபம் ஏற்றி வழிபட்ட அந்த பச்சைப் பயிரை பசு மாட்டிற்கு தானமாக கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நிறைவேற சோடஷ கலை நேரம்

இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் முழு நம்பிக்கையுடன் அன்னையை வழிபட்டு உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளும் யோகத்தை பெறுங்கள்.

- Advertisement -