நினைத்தது நடக்க வசம்பு தீபம்

vasambu deepam
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய சில காரியங்கள் என்று இருக்கும். அந்த காரியங்களை முயற்சி செய்யும் பொழுது அதற்குரிய வேண்டுதலையும் தெய்வத்திடம் நாம் வைப்போம். அப்படி வைக்கக்கூடிய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது நியாயமான வேண்டுதலாக இருந்தால் அந்த வேண்டுதல் நிறைவேறும். இதற்காக பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கிறது. இந்த பரிகாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் குறிப்பிட்ட வாரங்களோ அல்லது நாட்களோ நாம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அந்த வேண்டுதல் நிறைவேறும். அதை தவிர்த்து ஒரே நாளில் நாம் வைக்கும் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஒரு சில குறிப்பிட்ட பொருட்களுக்கு வசியம் செய்யக்கூடிய சக்திகள் என்பது இருக்கிறது. அதனால் தான் அந்த பொருட்களின் பெயரை நம் வாயால் கூட சொல்ல மறுப்போம். அந்த வகையில் பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மருந்து பொருட்களில் ஒன்றான பெயர் சொல்லாதது என்று கூறக்கூடிய வசம்பை வைத்து எந்த முறையில் நாம் வேண்டுதல் செய்தால் நம்முடைய வேண்டுதல் ஒரே நாளில் பலிக்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செய்யக்கூடிய நாளானது கரி நாளாக இருக்க வேண்டும். காலண்டரில் கரிநாள் என்று வரும் அந்த நாளில் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே தயார் செய்து வைத்துக் கொள்ளுவோம். இதற்கு நமக்கு வசம்பு தேவைப்படும். இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

இதை வாங்கி நன்றாக இடித்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை போல் புங்கை எண்ணெய் வேண்டும். இந்த புங்கை எண்ணெயை வாங்கி வந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் வசம்பு பொடி சேர்த்து நன்றாக காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த பரிகாரத்திற்கு நமக்கு நெல், 9 அகல் விளக்குகள், 9 அரச இலை தேவைப்படும்.

- Advertisement -

கரி நாளன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி எப்போதும் பூஜை செய்வது போல் செய்து முடித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு தாம்பாலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்துவிட்டு அதில் நெல்லைக்கொட்டி பரப்பி விட வேண்டும். அதற்கு மேல் அரச இலைகளை வைக்க வேண்டும். எட்டு அரசு இலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு இலை என்று 9 இலைகளை வைக்க வேண்டும்.

இந்த இலைகளுக்கு மேல் அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைத்து அதையும் வைத்து விட வேண்டும். அடுத்ததாக தயார் செய்து வைத்திருக்கும் வசம்பு எண்ணையை அதில் ஊற்ற வேண்டும். இதில் போடக்கூடிய திரி இரண்டு திரியாக இருக்க வேண்டும். ஒரு திரி மஞ்சள் நிறத்திலும் மற்றொரு திதி சிவப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக திரித்து ஒரே திரியாக போட வேண்டும்.

- Advertisement -

இப்படி போட்டுவிட்டு நெய்வேத்தியமாக உலர் திராட்சையை வைத்துவிட்டு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார கூறிவிட்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றிய பிறகு இந்த தீபத்தை பார்த்தவாறு மறுபடியும் நம்முடைய வேண்டுதலை கூற வேண்டும். இந்த முறையில் நாம் தீபமேற்றி வழிபட நம்முடைய வேண்டுதல் கண்டிப்பான முறையில் நிறைவேறும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ அருளை பரிபூரணமாக பெற வழிபாடு

மிகவும் வசிய தன்மை மிக்க வசம்பை இந்த முறையில் பயன்படுத்தி தீபம் ஏற்றி வேண்டுதலை வைக்க அந்த வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -