வேண்டுதல் நிறைவேற எளிமையான வழிபாடு

murugan poojai
- Advertisement -

நம்மில் பலருக்கும் தோன்றும் என்னும் நமக்கெல்லாம் எந்த வித அதிர்ஷ்டமும் கிடையாது. நான் கேட்டால் அது எங்கே கிடைக்கப் போகிறது என்ற ஒரு விரக்தி மனப்பான்மை இருக்கும். இதனாலேயே பலரும் பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுக்காமல் சோர்ந்து போய் இயல்பாக நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பார்கள்.

அப்படியானவர்கள் காண ஒரு எளிய வழிபாட்டு முறை தான் இது. இந்த முறையில் நாம் இறைவனை வழிபாடு செய்யும் பொழுது நாம் வேண்டும் யாவும் நினைத்த காலத்தை விட விரைவில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் வெள்ளி செவ்வாய் ஆகிய இரண்டு தினங்களில் தான் செய்ய வேண்டும். நம்முடைய வழிபாட்டுக்குரிய நாட்களில் வெள்ளி, செவ்வாய் எப்பொழுதும் விசேஷமானதாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் வீட்டில் வழிபாடு செய்யாதவர்கள் கூட இந்த இரண்டு நாட்கள் கட்டாயமாக செய்வார்கள்.இதற்கு காரணம் இவை இரண்டும் தெய்வ அனுகிரகத்தை நமக்குப் பெற்றுத் தரக் கூடிய நாட்கள்.

இந்த வழிபாட்டை கோரை நன்றாக பார்க்கத் தெரிந்தவர்கள் நல்ல ஹோரை நேரமாக பார்த்து செய்யுங்கள். எங்களுக்கு இதையெல்லாம் பார்க்க தெரியாது என்று சொல்பவர்கள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாடு செய்து விடுங்கள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் செய்யுங்கள். இடைப்பட்ட நேரத்தில் இந்த வழிபாடு செய்வதை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

இதற்கு பெரிய அளவில் நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. வெள்ளி செவ்வாய் அன்று காலை நேரத்திலே எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு இரண்டு வெற்றிலை, இரண்டு பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். இதற்கு வைக்கப்படும் பாக்கு நாம் கடைகளில் விற்கும் பாக்கெட் பாக்கை இதற்கு பயன்படுத்தக் கூடாது.

கலிப்பாக்கு அல்லது கொட்டை பாக்கு என்று சொல்வார்கள் அதை தான் பயன்படுத்த வேண்டும். இதையெல்லாம் வைத்து தீபம் ஏற்றிய பிறகு பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய இஷ்ட தெய்வம், குலதெய்வம் என யாரை வேண்டுமானாலும் மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு என்ன தேவையோ என்ன கஷ்டமோ அது சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று செய்யும் பொழுது முருகருக்கு உகந்த நாள் என்பதால் முருகரை நினைத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாளில் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். வெள்ளிக்கிழமை நாளில் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் போன்றோருக்கு உகந்த நாள் அன்றைய நாளில் லட்சுமி நாமங்களை சொல்லலாம். இதைத் தவிர்த்து உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வங்களுக்கான நாமங்கள் மந்திரங்கள் தெரிந்தால் அதையும் சொல்லுங்கள்.

இந்த முறையில் தொடர்ந்து வழிபாடு செய்து வரும் போது நிச்சயம் நீங்கள் வேண்டும் யாவும் உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் வைக்கப்படும் அந்த இரண்டு வெற்றிலை இரண்டு பாக்கு இரண்டு பழங்களுக்கு அத்தனை சக்தி உண்டு என்று சொல்லப்படுகிறது. இது நீங்கள் கேட்கும் அனைத்தையும் உங்களுக்கு ஈர்த்துக் கொடுக்கும் தன்மை உடையது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாற வழிபாடு

ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகளில் அன்றைய காலத்தில் இருந்தே வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது. இது நல்ல பலனை தரக் கூடிய வழிபாடு என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -