பணம் பெயர் புகழ் அந்தஸ்து என அனைத்தையும் பெற இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள்

agilandheeswari sivan
- Advertisement -

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த எண்ணம் எல்லோருடைய வாழ்க்கையிலும் பலிப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் எத்தனை முயற்சிகளை எடுத்தாலும் அனைத்தும் தோல்வியிலே முடியும். இது அவர்களுடைய தொழில், குடும்பம் என அனைத்தையும் பாதிக்கும். இவையெல்லாம் நம்முடைய கர்ம வினைகளில் பயனே என்பதில் சந்தேகமே கிடையாது.

இவையெல்லாம் விதி, கர்மாவின்படி தான் நடக்கும் என்றாலும் அதை நாம் ஏற்றுக் கொண்டு அப்படியே நகர முடியாதல்லவா!. அதை சரி செய்வதற்கான முயற்சியும் நாம் தானே எடுக்க வேண்டும். அப்படி உங்களுடைய விதியின் பலனாக நீங்கள் அனுபவிக்கும் துன்பத்தை மாற்ற ஒரு சில ஆலய வழிபாடுகள் துணை நிற்கும். அப்படியான ஒரு ஆலய வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

விதியை மாற்றும் விஜயாபதி

ஆலயங்கள் என்றாலே அது சிறப்பு வாய்ந்தது தான். அதிலும் பழம் பெறும் ஆலயங்களை வழிபாடு செய்யும் போது அதற்கான பலனும் புண்ணியமும் நமக்கு அதிகமாக வந்து சேரும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு ஆலய தரிசனம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த ஆலயமோ நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் உள்ள ஒரே தீர்வாக அமைகிறது.

அந்த ஆலயமானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் அருகில் இருக்கும் விஜயாபதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விசுவாமித்திர மகாலிங்க சுவாமி உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில். இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆலயம் பித்ரு தோஷம் நீங்க சிறப்பு வாய்ந்த கோவிலாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

விசுவாமித்திரர் செய்த யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை மற்றும் அரக்கர்களை கொன்றதால் ராம லட்சுமணன் அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதை நிவர்த்தி செய்ய இந்த தலத்தில் யாகங்கள் செய்யப்பட்டது. ஆகையால் இந்த ஆலயத்தில் நவ கலச யாகத்தை குடும்பத்துடன் செய்தால், ஜென்ம ஜென்மமாக தொடரும் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி இந்த ஆலயம் நவகிரக பரிகார ஸ்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. மற்ற ஆலயங்களில் சென்றால் இந்த முறையில் வழிபாடு இந்த பரிகாரம் என்பன எல்லாம் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை சென்று வழிபட்டு செய்தாலே நம்முடைய தீராத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: துர்க்கை அம்மனுக்கு இந்த நேரத்தில் விளக்கு போட்டு வழிபாடு செய்தால் கோடி நன்மைகள் தேடி வரும்.

அதிலும் வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, அரசியலில் பெரிய நிலையை அடைய, கடன் பிரச்சனை, குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகள் உடனடியாக தீர்த்து அந்தஸ்துடன் வாழ வைக்கக் கூடிய அபூர்வ ஸ்தலமாகவும் இது உள்ளது. இத்தகைய புகழ் பெற்ற இந்த ஆலயத்திற்கு நீங்களும் ஒருமுறை சென்று உங்களுடைய பிரச்சனைகள் தீர வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -