வேண்டுதல் நிறைவேற கல்லுப்பு பரிகாரம்

om logo kal uppu
- Advertisement -

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பலவிதமான ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் என இருக்கத் தான் செய்யும். அவைகள் நிறைவேற தான் அனுதினமும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். அத்துடன் நம்முடைய இஷ்ட தெய்வம் குலதெய்வம் போன்றவர்களை சரண் அடைந்து நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்து கொள்வோம்.

இப்படியான வேண்டுதல்களுடன் சில பரிகாரங்களை செய்யும் போது அது கூடிய விரைவில் நடந்தேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி நம்முடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் கல்லுப்பை கையில் வைத்து இந்த மந்திரத்தை சொல்லும் போது நிச்சயம் நடந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

நினைத்தது நடக்க கல் உப்பு பரிகாரம்

எந்த பரிகாரத்தை காலை பிரம்ம முகூர்த்த வேலையில் தான் செய்ய வேண்டும் மற்ற நேரங்களில் செய்வது அத்தனை பலனை தராது. இந்த பரிகாரம் செய்வதற்கு உங்கள் இரண்டு உள்ளம் கைகளிலும் கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

இந்த வழிபாடு செய்யும் பொழுது பூஜை அறையில் ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது கள்ளுப்பு இருக்கும் உங்கள் கையை தொடைகளின் மீது வைத்துக் கொண்டு கண்களை மூடி உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை மனதார ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கீழ்வரும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

சந்திரன் மந்திரம்

ஓம் ஸ்ரம் ஸ்ரீம் ஸ்ரௌம் ஸஹ் சந்திராய நமஹ

 

சுக்கிரன் மந்திரம்

ஓம் த்ராம் ஸ்க்ரீன் தவரும் சுக்ராய நமஹ

முதலாவதாக உள்ள சந்திரன் மந்திரத்தை 108 முறையும், இரண்டாவதாக உள்ள சுக்கிரனுடைய மந்திரத்தை 108 முறையும் பாராயணம் செய்ய வேண்டும். 108 முறை என்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் 108 முறை சொல்லும் போது நல்ல பலனை சீக்கிரத்தில் பெறலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை முறைப்படி செய்ய வேண்டும் எனில் 48 நாட்கள் செய்ய வேண்டும். ஆனால் 21 நாட்களுக்குள்ளாகவே உங்களுடைய வேண்டுதல் பலிப்பதற்கான யோகம் கிடைத்து விடும். ஆனாலும் நீங்கள் இருந்த பரிகாரத்தை இடைவிடாது தொடர்ந்து செய்ய வேண்டும்.

தினமும் கையில் வைத்திருக்கும் இந்த கல் உப்பை வழிபாடு முடிந்தவுடன் தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இதை தொடர்ந்து செய்ய செய்ய உங்களுடைய கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் பெறுவதோடு பணவரவையும் இந்த பரிகாரம் அதிகரித்துக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சொந்த வீடு அமைய முருகர் வழிபாடு

நம்முடைய வேண்டுதல் நிறைவேற எடுக்கக்கூடிய முயற்சியோடு இந்த பரிகாரத்தையும் செய்யும் பொழுது சீக்கிரத்தில் அதில் வெற்றி காணலாம் என்று சொல்லப்படுகிறது அதற்கு முழு நம்பிக்கை முதலில் அவசியம். இந்த பரிகார முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -