நாளை இந்த ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள் போதும். நீங்கள் தவற விட்ட அனைத்துமே உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

- Advertisement -

எல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் கிடைத்து விடாது என்பது ஒரு வாக்கு. சிலருக்கு நினைத்தவை எல்லாம் கிடைக்கவும் செய்யும். ஆனால் அதை அவர்களால் அனுபவிக்க தான் முடியாது. அவைகள் வந்த வேகத்திலே வந்த தடம் தெரியாமல் சென்று விடும். இப்படியானவர்கள் தனக்கு விருப்பமானது தன்னிடம் வந்து சேர்ந்து பிறகு, அது செல்லாமல் இருக்க இந்த எளிய பரிகாரம் உதவி செய்யும். அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை அனைவருமே செய்யலாம் ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்சனை உண்டு. அதாவது கையில் பணம் வரும் ஆனால் தங்காமல் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு அவர்களுக்கு பிடித்தமான வேலையை கிடைக்கும். ஆனால் அவர்களால் அதில் தொடர்ந்து செய்ய முடியாமல் ஏதாவது பிரச்சினையால் விலகி விடுவார்கள். அதே போல வீடு, நிலம், சொத்து என அனைத்துமே வாங்குபவர்கள். ஆனால் அதை அனுபவிக்கும் யோகம் இல்லாமல் போகும். ஏதோ ஒரு காரணத்தினால் அதை விற்க வேண்டிய சூழ்நிலையோ அல்லது அதை உபயோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் இப்படியானவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.

- Advertisement -

நினைத்த காரியம் வெற்றி பெற
இது போல பிரச்சனை உள்ளவர்களுக்கு சூரிய பகவானின் அனுகிரகம் இல்லாமல் இருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தையும் சூரிய பகவானுக்கு தான் செய்ய வேண்டும். அவருக்கு உகந்த நாட்களான ஞாயிறு, திங்கள் இந்த இரண்டு நாட்களில் இது செய்தால் மிகவும் உத்தமம். இந்த பரிகாரம் செய்ய ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீர், ஒரு துண்டு வெல்ல கட்டி, ரெண்டு துளசி இலை இது மட்டும் தான் தேவை.

இந்த பரிகாரத்தை சூரியன் உதித்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே செய்து விட வேண்டும். முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் வெல்லக் கட்டி சேர்த்து நன்றாக கரைத்த பிறகு துளசி இலையை அதில் போட்டு விடுங்கள். வீட்டில் துளசி இலை இருந்தால் அப்போது பறித்து உடனே போடலாம் இல்லை என்றால் முதல் நாள் இரவே எடுத்து வந்து வைத்து விடுங்கள். இந்தத் தண்ணீரில் வெல்லமும், துளசியும் சேர்த்த பிறகு நன்றாக கலந்து விட்ட பின் நீங்கள் சூரியன் உதிக்கும் திசை நோக்கி கிழக்கு முகமாக பார்த்து நிற்க வேண்டும். இதை வீட்டிற்குள் இருந்து செய்யக் கூடாது. வீட்டிற்கு வெளியே பால்கனி அல்லது மாடி இது போன்ற இடங்களில் நின்று கொண்டு சூரிய பகவானை நிமிர்ந்து பார்த்து வணங்கி இந்த மந்திரத்தை 9 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

ஓம் சூர்யாய நமஹ
இந்த மந்திரத்தை கூறிய பிறகு சூரிய பகவானை பார்த்த படியே இந்த தண்ணீரை கீழே மெதுவாக ஊற்ற வேண்டும். அதாவது சூரிய பகவானுக்கு நாம் அபிஷேகம் செய்வது போல அர்த்தம் ஆகும்.

இதையும் படிக்கலாமே: இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்த்து, சகல ஐஸ்வர்யங்களையும் உங்களை தேடி வரச் செய்யும்.

இந்த பரிகாரத்தை வாரம் வாரம் கூட செய்யலாம். இதற்கு இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்று வரையறையும் கிடையாது. இப்படி செய்ய முடியாதவர்கள் மாதம் ஒரு முறையாவது செய்யலாம். பரிகாரத்தை நாம் எந்த அளவுக்கு செய்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு வேண்டியது கிடைத்து எல்லாம் கை நழுவி செல்லாமல் இருப்பதோடு, இதுவரை இழந்தவை எல்லாம் கூட திரும்ப கிடைக்கும் யோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கையுடையவர்கள், நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை சேர்த்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழுங்கள்.

- Advertisement -