இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர்த்து, சகல ஐஸ்வர்யங்களையும் உங்களை தேடி வரச் செய்யும்.

- Advertisement -

பிரச்சனை இல்லாத மனிதன் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கோ வாழ்க்கையில் பிரச்சனை மட்டுமே இருக்கும். ஒன்று போனால் ஒன்று என்று பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அது போல உள்ளவர்களும், வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கி நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எந்த விதமான பிரச்சனைகள் என்றாலும் நாம் அதை உறுதியான மனதுடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொண்டால் கடவுளின் அனுகிரகத்தோடு அதில் நிச்சயம் வெற்றிக்கான முடியும். பிரச்சனைகளை கண்டு ஒரு போதும் சோர்ந்து விடாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் எடுத்தால் கண்டிப்பாக தெய்வம் நம் முயற்சிகளுக்கு துணை நிற்கும். கடன் பிரச்சனை, திருமணம் ஆகாமல் இருந்தால், குழந்தை பேரு இல்லாதவர்கள், வீடு வாங்க நினைப்பவர்கள், சொத்து தகராறு இப்படி உங்களுக்கு எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அனைத்தும் தீர இந்த பரிகாரம் உதவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அது என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு 108 வெற்றிலைகள் வேண்டும். அத்துடன் சுத்தமான தேன் கொஞ்சம் குங்குமப் பூ. குங்குமப்பூ வாங்க முடியாதவர்கள் மெரூன் நிறத்தில் இருக்கும் குங்குமத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் 108 நல்ல தரமான வெற்றிலை நிச்சயமாக வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை நாம் ஆஞ்சநேயருக்கு செய்யப் போகிறோம் எனவே சனிக்கிழமைகளில் செய்யும் போது மிகவும் விசேஷமாக இருக்கும். இந்த பரிகாரத்தை காலை முதல் மாலை வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய முதலில் வெற்றிலைகளை நன்றாக அலசி சுத்தம் செய்து ஒரு தாம்பாளத்தில் வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தேனில் குங்குமப்பூ அல்லது குங்குமம் இரண்டில் எது உங்களிடம் உள்ளதோ அதை நன்றாக குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து பூஜை அறையில் தீபம் ஏற்றிய பிறகு ஒரு வெற்றிலையை கையில் எடுத்து உங்கள் மோதிர விரலால் தேன், குங்குமப்பூ கலந்த கலவையில் தொட்டு ஸ்ரீ ராமா என்று எழுத வேண்டும். மோதிர விரலால் எழுத முடியாதவர்கள் துளசி காம்பு அல்லது மாதுளை குச்சி இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த 108 வெற்றிலையிலும் ஸ்ரீ ராமா என்று எழுத வேண்டும். ஒவ்வொரு வார்த்தை எழுதும் போதும் ஸ்ரீ ராமா என்று மனதில் நினைக்க வேண்டும். இப்படி 108 வெற்றிலையிலும் எழுதி முடித்த பிறகு அதை மாலையாக தொடுக்க வேண்டும். இந்த வெற்றிலையை மாலையாக தொடுத்த பிறகு கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு இந்த மாலையை அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும். இதே போல் தொடர்ந்து 16 சனிக்கிழமை அல்லது 16 செவ்வாய்க்கிழமை நீங்கள் எந்த நாளில் பரிகாரத்தை தொடங்குகிறீர்களோ அந்த நாளில் இதை தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

16 வாரங்கள் இந்த பூஜையை செய்து முடிக்கும் போதே நீங்கள் எந்த குறைக்காக இந்த வேண்டுதல் வைத்தீர்களோ நிச்சயம் அதற்கான தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 16 வாரங்கள் தொடர்ந்து செய்ய முடியாதவர்கள் மாதத்தில் ஒரு நாள் என்று 16 மாதங்கள் கூட செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: எடுத்த காரியத்தில் முழுமையான வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் இதை செய்தால் போதும்.

உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகி நீங்கள் நிம்மதியான சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழ, இந்த பரிகாரம் உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்

- Advertisement -