பெரிய வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற உங்கள் கனவை நினைவாக்க கூடிய அருமையான இந்த நாளை தவிர விடாமல் இன்று இரவுக்குள் இப்படி செய்து விடுங்கள்.

rich man cash write
- Advertisement -

இந்த உலகில் ஆசை இல்லாத மனிதரை நாம் காண்பது மிகவும் அரிது. ஆசைகள் காணும் அளவுகள் வேண்டுமானாலும் மாறுபடுமே அன்றி ஆசையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இங்கு யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த ஆசைகள் அனைத்தையும் நிறைவேற வேண்டுமென்றால் நம்முடைய எண்ணங்கள் அதை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். அத்துடன் இந்த ஒரு எளிய வழியும் கையாளும் போது நம்முடைய கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நினைத்தது நிறைவேற ஏஞ்சல் எண் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்று சொன்னால் அது நம்முடைய எண்ணங்கள் தான். நம்முடைய எண்ணங்கள் எந்த அளவிற்கு நேர்மறையாக செயல்பட்டு இந்த பிரபஞ்சத்திடம் கேட்கிறதோ, அனைத்தையும் பிரபஞ்சம் நமக்கு செய்ய தயாராக இருக்கிறது. அதை பெறுவதற்கான ஒரு எளிய வழிமுறை தான் இந்த ஏஞ்சல் எண் பரிகாரம். இதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த ஏஞ்சல் எண் பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தக் கூடிய அந்த எண்ணானது 777 இது தான். இந்த777 என்பது நம்முடைய வேண்டுதல்களை பிரபஞ்சத்திடம் கொண்டு சென்று பிரபஞ்சத்திடம் இருந்து நமக்கானதை பெற்றுத் தரும் ஒரு வடிகாலாக செயல்படுகிறது என்றே சொல்லலாம். அப்படியான இந்த எண்ணை பயன்படுத்தி தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை இன்றே செய்ய வேண்டும் என்பதற்காக காரணம். இன்றைய தேதி 16.7.2023 இவை அனைத்தையும் கூட்டினாலும்777 என்று வரும். நம்முடைய எண்ணத்தை நிறைவேற்றக் கூடிய இந்த எண் கூட்டுத் தொகையாக வரும் இந்த நாளில் இதை செய்யும் பொழுது கூடுதல் பலனை பெற முடியும். இந்த பரிகாரத்தை இன்று காலை முதல் இரவு வரை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

- Advertisement -

இதற்கு ஒரு வெள்ளை நிறத் பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு அதன் முன்னே அமர்ந்து அந்த தாளில் உங்களுடைய ஆசைகள் எதுவோ அதை எழுதுங்கள். நல்ல வீடு அமைய வேண்டும் வேலை அமைய வேண்டும் என்பன போன்ற உங்கள் ஆசைகள் ஏதாவது ஒன்றை ஏழு முறை எழுதலாம் அல்லது ஏழு ஆசைகளை ஒன்றின் பின் ஒன்றாக எழுதலாம் அது உங்களின் தேவையை பொறுத்து.

இப்படி எழுதும் போது நீங்கள் வேலை அமைந்து விட்டது எனவும், வீடு கட்டி விட்டேன் எனவும், பணம் கிடைத்து விட்டது எனவும் நேர்மறையாகவே நினைத்து எழுத வேண்டும். இதை எழுதிய பின்பு 5 நிமிடம் கண்ணை மூடி தியான நிலையில் அமர்ந்து நீங்கள் கிடைத்து விட்டதாக நினைத்ததை அனுபவிப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைத்தால் அந்த வீடு வாங்கி நீங்கள் அதை மகிழ்ச்சியாக வாழ்வது போல மனதுக்குள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட ஆயுள் கிடைக்க, வருமானம் உயர ஆடி மாதத்தில் இதை செய்ய மறக்காதீங்க! கஷ்டம் தீர்ந்து பணம் புழங்க செய்யும் வழிபாடு என்ன?

நீங்கள் எழுதும் இந்த எண்ணும் உங்களுடைய எண்ணமும் ஒன்றிணைந்து பிரபஞ்சத்திடம் சென்று அது அனைத்தையும் உங்களுக்கு மிக விரைவில் நடத்தித் தரக் கூடிய வாய்ப்பை இந்த பரிகாரம் ஏற்படுத்தி தரும். இது தான் இந்த பரிகாரத்தின் சூட்சமம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து உங்கள் ஆசைகள் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -