நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் வெற்றியாக மாற்றி தரும் இந்த ஒரு பொருளை தவறாமல் உங்கள் வீட்டின் வாசலில் மாட்டி வையுங்கள்

vettiver
- Advertisement -

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஏதாவது புதிய விஷயத்தை துவங்குவதாக இருந்தால் மனதில் ஒரு சிறு பயம் இருந்து கொண்டுதான் இருக்கும். நான் செய்யப்போகும் இந்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும், இதில் எந்தவித தவறும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்படி சிறுவர்களாக இருக்கும் பொழுது ஆரம்பித்து, பெரியவர்களான பின்னரும் அனைவருக்கும் இந்த பயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து அதன்பின் முடிவெடுத்து சரியாக நடந்து வருகிறோம். இப்படி சரியான முடிவு எடுத்து சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தின் மூலம் ஒரு வியாபாரம் துவங்குவதற்க்கு நமக்கு பெரும் பயம் ஏற்படும். இதுவரை நாம் சம்பாதித்த அனைத்து பணங்களையும் இந்த தொழிலில் செலவு செய்கிறோம், இது வெற்றி அடையுமா? இது நமக்கு சரியாக வருமா? என்ற அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறான பயத்தை போக்கி நாம் தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றியாக மாற இந்த வெட்டிவேர் மாலை மட்டும் போதும்.

வீடாக இருந்தாலும், தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு நேர்மறை சக்திகள் நிறைந்து இருக்க வேண்டும். நாமும், நம்மை சுற்றியுள்ளவர்களும் எப்பொழுதும் நல்லவிதமாக யோசித்தாலும், பேசிக்கொண்டிருந்தாலும், நல்ல விதமான செயல்களை செய்து கொண்டிருந்தாலும் மட்டுமே இவ்வாறான நேர்மறை அதிர்வுகள் நம்மை சூழ்ந்து இருக்கும்.

- Advertisement -

அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றோ அல்லது நம்மிடம் பழகிக்கொண்டே நம்மைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்தால், அங்கு எதிர்மறை அதிர்வுகளே நிலவிக் கொண்டிருக்கும். இவ்வாறான சூழ்நிலையில் நம்மை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களுமே தவறாக தான் முடியும்.

எனவே வீட்டின் வாசலிலும் வியாபாரம் செய்யும் இடத்தின் நிலை வாசலிலும் வெட்டிவேர் மாலையை மாட்டி வைக்க வேண்டும். பொதுவாகவே இதில் பல அற்புத சக்திகள் உள்ளது. இவற்றை ஆன்மீக விஷயங்களின் பொழுது தவறாமல் பயன்படுத்துவதுண்டு. அன்றைய காலம் முதல் இன்று வரை அனைத்து விதமான பூஜை விசேஷங்களிலும் இந்த வெட்டிவேர் பங்கு பெறுகிறது.

- Advertisement -

கோவில்களுக்கு செல்லும்பொழுது அங்கு ஒருவித நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும். அந்த நறுமணம் நமது மனதில் அமைதியை ஏற்படுத்தும். கோவிலுக்கு சென்று வந்தாலே நமது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்து விடும். இதற்கு காரணம் அங்கு பயன்படுத்தும் வாசனைப் பொருட்களில் வெட்டிவேர் முதலிடம் பெறுகிறது.

எனவே வீட்டின் வாசலில் மாட்டி வைக்கும் வெட்டிவேர் எப்பொழுதும் ஒரு நறுமணத்தைக் வீசிக்கொண்டிருக்கும். வீட்டிற்குள் நுழையும் பொழுது எந்த வித பிரச்சனையாக இருந்தாலும் அது நமது மனதை விட்டு அகன்று விடும். வெட்டிவேரின் வாசனை மூலமாக எப்பொழுதும் நமது சிந்தனை அனைத்துமே நேர்மையாகவே இருக்கும். இவ்வாறு மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் சரியாகிவிட்டாலே நாம் நினைக்கும், நடத்தும் காரியம் அனைத்துமே வெற்றியாக முடியும்.

- Advertisement -