நிற்காமல், பணம் நிலை வாசலுக்குள் வந்து கொண்டே இருக்க வேண்டுமா? நிலை வாசலில் நின்றபடி இந்த முடிச்சை கட்டி தொங்க விடுங்கள்.

vasal1
- Advertisement -

ஒட்டுமொத்த பண பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க கூடிய பரிகாரம் தான் இது. இந்த பரிகாரத்தை யார் செய்தாலும் நிச்சயமாக அவர்களுக்கு பலன் கிடைக்கும். கடனை கொடுத்து விட்டேன். கடன் கொடுத்த இடத்தில் இருந்து பணம் எனக்கு திரும்பவும் வசூல் ஆகவில்லை. நான் கடன் வாங்கி இருக்கின்றேன் என்னால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இப்படி இரண்டு வகையான பிரச்சனைகளுக்கும் இந்த பரிகாரம் தீர்வை கொடுக்கும். இதோடு உங்களுடைய நிலை வாசலுக்குள் எந்த நேரமும் பணம் வந்த வண்ணம் இருக்கும். எந்த நேரமும் என்றால் வருமானத்திற்கு எந்த குறையும் வராது அதுதான். வருமானம் தடைபடாது.

இந்த பரிகாரத்திற்கு சக்தி வாய்ந்த இரண்டு பொருட்களை பயன்படுத்த போகின்றோம். நமக்கு தெரிந்த பொருட்கள் தான். இருப்பினும் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக சேரும்போது அதற்கு அதீத சக்தி வந்துவிடும். முதல் பொருள் வசம்பு. இரண்டாவது பொருள் படிகாரம். ஒரு பொருளை வசியம் செய்வதற்கு வசம்பை தவிர வேறு ஒரு பொருளால் நிச்சயம் முடியவே முடியாது. கண் திருஷ்டியையும், கெட்ட சக்தியையும் ஒழித்து கட்டுவதற்கு இந்த பரிகாரம் செய்யக்கூடிய வேலை ரொம்ப ரொம்ப பெரியது.

- Advertisement -

இந்த இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். படிகாரம் இரண்டு, படிகாரக் கல்லும் இரண்டு. மீடியம் சைஸில் இருக்கும் கல்லாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் வைத்து கட்ட தேவையான சதுர வடிவில் இருக்கும் பச்சை நிற துணி. அவ்வளவு தான். நிலை வாசலுக்கு வெளியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை அந்த அகல் விளக்கு பக்கத்தில் ஒரு சிறிய தட்டின் மேல் வைத்து விட்டு, நின்று கொண்டு, நிலை வாசல் தேவதையையும் குலதெய்வத்தையும் நன்றாக வேண்டிக்கொண்டு இந்த முடிச்சை எடுத்து நிலை வாசலில் மாட்டி விடுங்கள்.

காலை சூரிய பகவான் உதிக்கும் போது இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதாவது 5:45 லிருந்து 6:10 மணிக்குள் இந்த முடிச்சை கட்டி நிலை வாசலில் தொங்க விட்டு விடுங்கள். அவ்வளவு தான். உங்களை பிடித்த பண பிரச்சனை அனைத்தும் தீர்ந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வரவே வராது என்ற பணமும் உங்கள் வீட்டிற்குள் வரும். அதே சமயம் உங்களால் கொடுக்கவே முடியாத கடன் தொகையை கூட சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள். உங்களுடைய வீட்டில் மன நிம்மதி நிறைவாக இருக்கும். அந்த பிரச்சனை இந்த பிரச்சனை என்று பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு கூட ஒரு மன தெளிவு ஏற்படும். அந்த அளவுக்கு இந்த சின்ன பரிகாரம் பலனளிக்கும். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு மட்டும்.

இதையும் படிக்கலாமே: குளித்து முடித்த பின் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். மூதேவி உங்களை நெருங்கவே மாட்டாள்.

இந்த முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. வருடம் ஒருமுறை உள்ளே இருக்கும் பொருட்களை முடிச்சுடன் அப்படியே ஓடும் தண்ணீரில் விட்டு விடலாம். அப்படி இல்லையென்றால் கால்படாத இடத்தில் போட்டுவிட்டு, உங்களுக்கு பரிகாரத்தின் மீது மன திருப்தி இருந்தால் மீண்டும் இதே போல ஒரு முடிச்சை கட்டி நிலை வாசலில் தொங்கவிடலாம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து.

- Advertisement -