தீராத நோய் தீர தீப வழிபாடு

dheepam viyathi
- Advertisement -

நம்மிடம் எவ்வளவு தான் சொத்து, பணம், நகை இருந்தாலும் அனைத்தையும் அனுபவிக்க ஆரோக்கியம் மிகவும் முக்கியம். இதையே தான் நம் முன்னோர்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்ற ஒரு எளிமையான வார்த்தையின் மூலம் சொல்லி வைத்தார்கள். ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய ஆரோக்கியத்தில் எந்த அளவிற்கு கவனத்தை செலுத்தி பாதுகாக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய செல்வத்தை சம்பாதித்த பலனை தரும்.

இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு வியாதி இருக்கத் தான் செய்கிறது. அது சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கலாம். ஆனால் மருந்து மாத்திரை சாப்பிடுவது என்பது நிச்சயமாக உண்டு. இதில் இன்னும் சில இடங்களில் என்ன வியாதி என்றே தெரியாது. அதை சரி செய்யவும் முடியாமல் அவதிப்படுவார்கள்.

- Advertisement -

அப்படி வியாதியின் பிடியில் சிக்கி அவதிப்படுபவர்களை எளிதில் மீட்டுக் கொண்டு வரக் கூடிய அருமையான தீப பரிகாரத்தை தான் இப்போது இந்த ஆன்மீகம் பதிவில செய்து கொள்ளப் போகிறோம்.

நோய் குணமாக தீபம்

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த பரிகாரத்தை எதற்காக செய்ய வேண்டும் என்பதை முதலில் பார்த்து விடலாம். என்ன தான் எல்லோருக்கும் வியாதிகளும் நோய்களும் இருந்தாலும் அதற்கென ஒரு மருந்து நிச்சயமாக இருக்கத் தான் செய்கிறது. சில இடங்களில் நாமே பார்த்திருப்போம் நன்றாக இருப்பார்கள் திடீரென உடல் நலக் கோளாறு வந்து விடும்.

- Advertisement -

மருத்துவமனையில் பரிசோதித்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று தான் வரும். ஆனால் அந்த வியாதியின் தியாகத்தில் இருந்து அவர்களால் வெளிவர முடியாது. அவர்களும் இதற்கென பெரிய அளவில் சிகிச்சைகளும் மேற்கொள்ள தான் செய்வார்கள். என்ன காரணம் என்றே தெரியாமல் வரக் கூடிய இந்த வியாதிகள் விலக இந்த பரிகாரம் உடனே நல்ல தீர்வாக அமையும்.

அதே போல் நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக் கொண்டும் கொஞ்சம் கூட சரியாகாமல் வியாதி தொடர்ந்து கொண்டே இருக்கும். இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால் இந்த பரிகாரத்தை செய்யலாம். சுருக்கமாக சொல்வதென்றால் காரணமே அறியாமல் திடீரென வியாதியில் சிக்கி வெளிவர முடியாமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு ஒரு அகல் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். வேறு எந்த எண்ணையும் இதற்கு பயன்படுத்தக் கூடாது. அதில் நான்கு கிராம்பை சேர்த்து பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஏற்றும் முறை தான் மிகவும் முக்கியமானது. இதை உங்கள் வீட்டில் வரவேற்பறையில் வைத்து ஏற்றுங்கள்.

இந்த தீபம் ஏற்றும் போது வீட்டில் ஒரு சின்ன வெளிச்சம் கூட இருக்கக் கூடாது. வீடு முழுவதும் இருள் சூழ்ந்ததாக இருக்க வேண்டும். அந்த சமயத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்து விட்டு நீங்கள் இரவு உறங்கி விடலாம். தீபத்தை நீங்களாக குளிர வைக்க வேண்டாம். அதுவாக எரிந்து அனையட்டும். ஒரு வேளை நல்ல பெரிய அகல் நிறைய எண்ணெய் ஊற்றி இரவு முழுவதும் எறியும்படி இந்த விளக்கை ஏற்றினாலும் மிகவும் நல்லது.

இந்த தீபம் நம் வீட்டில் நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கக் கூடிய அமானுஷ்ய சக்திகளை விலக்கி விடும். தீய சக்திகளையும் துரத்தி அடித்து விடும் என்று சொல்லப்படுகிறது. வியாதியினால் துன்பப்படுபவர்கள் அதன் தாக்கத்திலிருந்து வெளிவர இந்த தீப பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வாராகி வழிபாடு

நீங்கள் எடுக்கும் சிகிச்சையுடன் தொடர்ந்து இந்த பரிகாரத்தையும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -