வெகுநாட்களாக தீராத நோய் தீரவும், மன உளைச்சல் சரியாகவும் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். விரைவில் நல்ல பலன் கிடைத்துவிடும்.

dhanam
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் நமது உடலில் பலம் இருக்கும் வரை உழைத்து அதனை சரி செய்து விடலாம். ஆனால் உடம்பிற்கு பலம் இல்லாமல், ஆரோக்கியப் பிரச்சினை ஏற்படும் பொழுது மற்ற போராட்டங்களை எவ்வாறு சரி செய்ய முடியும். எனவே மனிதனுக்கு உடல் நலம் என்பது மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே தான் நம் முன்னோர்கள் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்லி இருக்கிறார்கள். என்ன தான் சொத்து, பணம், நகை, புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் என்பது இல்லாமல் இருந்தால் இவை அனைத்திற்கும் எந்தவித பலனும் இல்லாமல் போய்விடும். நமது மனது என்பது இவற்றை எதையும் அனுபவிக்காமல் சோர்வாக இருந்திடும். கவலை மட்டுமே மிஞ்சும். வாரங்கள் இதுபோன்ற நோயிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் விடுபட இந்த குறிப்பிட்ட தானங்களை தவறாமல் செய்திடுங்கள்.

அளவுக்கு அதிகமான பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் தானம் செய்ய முடியும் என்றும், பணம் இல்லாதவர்கள் தானம் செய்ய முடியாது என்ற எண்ணமும் மிகவும் தவறானது. நம்மிடம் பத்து ரூபாய் இருந்தால் கூட அதில் ஒரு ரூபாயை மற்றவருக்கு தானம் கொடுப்பது தான் இருப்பதிலேயே சிறந்த தானமாகும்.

- Advertisement -

இவ்வாறு நாம் பிறருக்கு ஒரு பொருளை தானமாகக் கொடுக்கும் பொழுது அவர்களின் மனது நம்மை வாழ்த்தும். எனவே ஜீவராசிகளுக்கும், மனிதர்களுக்கும், சில நேரங்களில் கோவில்களுக்கும் சில குறிப்பிட்ட தானங்களை செய்துவர நமது உடல் பிரச்சனைகளும், மன பிரச்சனைகளும் விரைவாக தீர்ந்து விடும்.

இதில் முக்கியமாக கீரை வகைகளை ஜீவராசிகளுக்கு அதாவது ஆடு, மாடு, கோழி என இவற்றிற்கு தானமாக கொடுத்து வர எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் அது விரைவில் குணமாகும். அடுத்ததாக பச்சரிசியையும் உயிரினங்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அத்துடன் வாழைக்காயை இரண்டாக உடைத்து கொண்டு, அதனை பசு மாடு அல்லது எருமை மாட்டிற்க்கு உணவாக அளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு சில பழங்களை ஒன்றாக கலந்து கொண்டு அவற்றுடன் வெல்லம் சேர்த்து உயிரினங்களுக்கு தானமாக கொடுத்தால் நோய்கள் தீர சிறந்த வழி கிடைக்கும். அடுத்ததாக கோவில்களில் விளக்கு ஏற்றுவதற்கு எண்ணெயை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மன உளைச்சல் அனைத்தும் விலகி மன அமைதி ஏற்படும்.

பிறகு முக்கியமாக கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்தை அப்படியே முழுமையாகவோ அல்லது உணவாகவோ செய்தோ ஜீவராசிகளுக்கும், மனிதனுக்கும் தானமாக வழங்கி வர, உடலில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிறைந்த தீர்வு உண்டாகும். வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

- Advertisement -