பணத்தட்டுப்பாடு வராமல் இருக்க பரிகாரம்

mahalashmi
- Advertisement -

மகாலட்சுமிக்கு நன்றாக தெரியும். யார் கையில் பணத்தை கொடுக்கணும். யார் கையில் பணத்தை கொடுக்கக் கூடாது என்று. நம்பிக்கையோடு நீங்கள் மகாலட்சுமியை நினைத்து வழிபாடு செய்யும் பட்சத்தில் நிச்சயமாக உங்கள் கைக்கு பணம் வரும். எதிலுமே நம்பிக்கை கிடையாது. எல்லா வழிபாட்டு முறையும் மூடநம்பிக்கை என்று சொல்லி பணத்தையும், பணம் தரும் மகாலட்சுமியையும், மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களையும் உதாசீனப்படுத்துபவர்கள் வீட்டில் நிச்சயமாக பண கஷ்டம் இருக்கும்.

நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பி செய்யக்கூடிய பரிகாரங்கள், பல மடங்கு பலன் தரும். நம்பிக்கை இல்லை என்றால் பரிகாரங்களை செய்ய வேண்டாம். இந்த பரிகாரமும் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள பரிகாரம்தான். பணம் தேவை என்பவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

பணம் தரும் பட்டை பரிகாரம்

இந்த ஒரு பொருள் இருக்கும் இடத்தில் எல்லா செல்வ வளமும் பணமும் இருக்கும். பணம் வைக்கும் இடத்தில் எல்லாம் இந்த ஒரு பொருளை வையுங்க. அது என்ன பொருள் தெரியுமா. பட்டை. பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருட்களில் இந்த பட்டைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை என்றால் ஒரு பட்டை துண்டை எடுத்து பணம் வைக்கும் பர்ஸில் வையுங்க. சின்ன துண்டு பட்டை வைத்தால் போதும். பட்டை வாசம் நிறைந்த இடத்தில் பணத்தின் வாசமும் வீசும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பழைய பட்டையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு புது பட்டை வைக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் வாசலைக் கூட்டி கோலம் போடுவீங்க. ஆனால் வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் ஸ்பெஷல். வெள்ளிக்கிழமை என்றால் வாசலை கூட்டி கூடுதல் அழகோடு கோலம் போடும் வழக்கம் பெண்களிடத்தில் இருக்கும் அல்லவா. வாசலில் அழகாக கோலம் போட்டு விடுங்கள். பட்டை தூள் எப்போதும் சமையலறையில் இருக்கட்டும்.

வாசலில் கோலம் போட்டுவிட்டு, சிறிதளவு பட்டை தூளை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, அப்படியே நிலை வாசலுக்கு உள்பக்கம் ஊதிவிட வேண்டும். நிலை வாசலுக்கு வெளியே நின்று கொள்ளுங்கள். வீட்டிற்கு உள் பக்கம் பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள். வீட்டிற்கு வெளியே இருக்கும் மகாலட்சுமியை இந்த பட்டை தூளின் ரூபத்தில் வீட்டிற்குள் அழைத்து வர போகிறீர்கள்.

- Advertisement -

இந்த பட்டை தூள் எந்த அளவுக்கு வேகமாக உங்கள் வீட்டில் உள் பக்கம் பறந்து வருகிறதோ, அந்த அளவுக்கு வேகமாக உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் வரும் என்பது தான் இந்த பரிகாரத்தினுடைய நம்பிக்கை. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்யலாம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது தினமும் இந்த பட்டை தூளை வீட்டிற்குள் ஊதி விட்டால், தினம் தினம் பணவரவு இருக்குமா என்று கேட்டால், நிச்சயம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இலை அர்ச்சனை பலன்கள்

தினம் தினம் நிலை வாசலில் கோலம் போட்டுவிட்டு, வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இந்த பட்டை தூளை வீட்டிற்குள் ஊதி விடுங்கள். மகாலட்சுமியே வீட்டுக்குள் வருக வருக என்ற வார்த்தையை சொல்லிவிட்டு, வீட்டிற்குள் வாருங்கள். நிச்சயம் உங்கள் வீட்டிற்குள் மகாலட்சுமி வருகை தருவாள். பண தட்டுப்பாடு என்பது உங்கள் வீட்டில் இருக்கவே இருக்காது. 48 நாள் தொடர்ந்து இதை செய்துதான் பாருங்கள். நடக்கும் அதிசயத்தை.

- Advertisement -