என்ன தான் மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் உடல் உபாதை தீரவில்லையா? வீட்டிலேயே இந்த ஒரு அர்ச்சனையை செய்து விபூதியை இப்படி பூசி பாருங்கள் நோய்கள் எல்லாம் பஞ்சாய் பறந்தோடும்.

- Advertisement -

மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற காரணத்திற்காக பணத்தை தேடி சம்பாதிக்கின்றனர். ஆனால் பணம் இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்று கேட்டால், 90 சதவீதத்திற்கும் மேல் இல்லை என்று தான் சொல்வார்கள். ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் மட்டும் முக்கியமல்ல. உடல் ஆரோக்கியமும் முக்கியம்தான். அப்படிப்பட்ட உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு பல வழிமுறைகளை மேற்கொள்கிறோம். இருப்பினும் ஏதாவது ஒரு உடல் உபாதை வந்து கொண்டு தான் இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவரை அணுகினால், அவர் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு விட்டு, “நீங்க நார்மலா தான் இருக்கீங்க” என்று சொல்லி முடித்து விடுவார். இந்த சூழ்நிலையில் நம் உடல் உபாதை எதனால் வந்தது? அதை எப்படி சரி செய்வது? என்று தெரியாமல் பலர் வருந்தி கொண்டிருக்கின்றனர்.

இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போது மருத்துவர்கள் “கடவுள் தான் காப்பாத்தணும்” என்று சொல்வார்கள். அதை தான் நாம் இப்பொழுது செய்யப் போகிறோம். மருத்துவர்களை அணுகியும் நம்முடைய உடல் உபாதை நீங்கவில்லை என்றால், அடுத்ததாக நாம் அணுக வேண்டியது கடவுளை தான். அப்படி கடவுளை நாம் வணங்கி நம் உடல் உபாதைகளை எப்படி எல்லாம் நீக்கலாம் என்றுதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தீராத நோய் தீர வழிபாடு – Noi theera pariharam in Tamil
மந்திரமாவது நீறு என்னும் திருநீற்றுப் பதிகம் இருக்கிறது. அதையே சான்றாக வைத்து நாம் இப்பொழுது ஒரு பரிகாரத்தை பார்க்கப் போகிறோம். இந்த பரிகாரத்திற்காக நமக்குத் தேவைப்படும் பொருட்கள் மூன்றே மூன்று தான். விபூதி, வில்வம், வெற்றிலை. முதலில் நாம் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை வைத்து, அதில் வில்வ இலைகளை வைக்க வேண்டும். வில்வ இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது மட்டுமல்லாமல் சிவபெருமானுக்குரிய இலையாகவும் கருதப்படுகிறது.

இந்த வில்வ இலைகளின் மேல் ஒரு வெற்றிலையை வைக்க வேண்டும். வெற்றிலையில் அதீத மருத்துவ குணங்கள் இருக்கின்றது. கடவுளுக்கு நெய்வேத்தியமாக வெற்றிலையை நாம் சமர்ப்பிக்கிறோம். ஆதலால் வெற்றிலை ஆன்மீக ரீதியாகவும் முக்கியமான இலையாக கருதப்படுகிறது. இப்பொழுது நாம் நம்முடைய மோதிர விரலால் விபூதியை எடுத்து “ஓம் ருத்ராய நமஹ” என்று 108 முறை வெற்றிலையில் விபூதியை போட வேண்டும்.

- Advertisement -

அப்படி போடப்படும் விபூதியானது பசுஞ்சானத்தில் இருந்தோ அல்லது ஹோம குண்டத்தில் இருந்தோ எடுத்திருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். 108 முறை விபூதியை அர்ச்சித்த பிறகு கற்பூர ஆராதனை காட்ட வேண்டும். பிறகு அர்ச்சனை செய்த விபூதியை எடுத்து மனதார வேண்டிக் கொண்டு, நம் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும்.

அதே சமயம் நம் உடலில் எந்த இடத்தில் உபாதை இருக்கிறதோ அந்த இடத்திலும் விபூதியை பூச வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் விபூதியை பூசி வர நம்முடைய உடல் உபாதை நீங்கும். சில நேரங்களில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் அவ்வாறு இருக்கும் போது ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்து, அதில் நாம் அர்ச்சித்து வைத்திருக்கும் விபூதியையும், வில்வத்தையும் நன்றாக கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

அவ்வாறு தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேறி உடல் நலனில் நல்ல மாற்றம் ஏற்படும். மீதம் இருக்கும் விபூதியை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த எளிமையான பரிகாரத்தை நாம் செய்து உடல் உபாதைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

- Advertisement -