அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் குறைய, தீராத நோயிலிருந்து விடுபட உங்கள் குல தெய்வத்திற்கு இந்த அரிசியில் பொங்கல் வையுங்கள்

medical
- Advertisement -

நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் மருத்துவமனைகள் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஊருக்கு ஒரு கை வைத்தியம் செய்பவர் மட்டுமே இருப்பார்கள். அவ்வாறு மருத்துவம் என்பது அவசியத்திற்கு தேவைப்படும் ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மருத்துவமனைகள் ஆங்காங்கே புதியதாக திறக்கப்படுகின்றன. மருத்துவம் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. மருத்துவமனை இல்லாத இடத்தில் மக்கள் குடியேறுவதற்கே சற்று யோசிக்க தான் செய்கின்றனர். அவ்வாறு வீட்டிற்கு ஒரு நோயாளி என்று அனைவரது வீட்டிலும் மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மருத்துவத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. மாதத்திற்கு மருத்துவ செலவிற்க்கே பெரும் தொகையாக பலரும் செலவு செய்கின்றனர். இவ்வாறான மருத்துவ செலவுகள் குறைவதற்கும், நோயில் இருந்து விடுபடுவதற்கும் உங்கள் குலதெய்வத்திற்கு இந்த பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்துக்களின் வழிபாடுகளில் ஒன்றாக இருப்பது தான் கோவிலில் பொங்கல் வைப்பது. செவ்வாய், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவது அனைவரும் பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும். முந்தைய காலத்தில் எல்லாம் வீட்டில் ஒரு பிரச்சனை என்று வந்தவுடன் முதலில் குலதெய்வத்திற்கு ஒரு பொங்கல் வைக்க வேண்டும் என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்.

- Advertisement -

இவ்வாறு குல தெய்வத்திற்கோ அல்லது இஷ்ட தெய்வத்திற்கோ ஒரு பொங்கல் வைத்து, பூஜை செய்துவர நமது பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் என்பது நமது முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். எனவே தான் காலம் காலமாக இன்று வரையிலும் அந்த பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

பொதுவாகவே பச்சை அரிசியில் வெள்ளம் மற்றும் நெய் சேர்த்து பொங்கல் வைத்து, தெய்வத்திற்கு படைத்து வணங்குவதை தான் வழக்கமாக பார்த்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் கருங்குருவை அரிசியில் பொங்கல் வைத்து குல தெய்வத்தை வணங்க வேண்டும்.

- Advertisement -

முன்பெல்லாம் சில நோய்களை பணக்கார நோய்கள் என்று குறிப்பிடுவோம். ஆனால் இப்பொழுதெல்லாம் ஏழை, பணக்காரன், பெரியவன், சிறியவன் என்ற வித்தியாசம் இல்லாமல் நோய் தாக்குதல் பரவலாக இருக்கிறது. இருக்கின்ற நோய்களுக்கு மருந்து வாங்குவதற்காகவே மனிதன் சம்பாதிக்கும் நிலையாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு சமூகத்தில் நோய்த்தொற்று பரவிக் காணப்படுகிறது.

இவ்வாறு பணம் வீண் விரயமாகும் இந்த நோய் பிரச்சனையில் இருந்து விடுபட கருங்குருவை அரிசியில் பொங்கல் வைத்து, தெய்வத்தை வணங்கி வாருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்பட்டு நோயில் இருந்து முழுவதுமாக விடுபட முடியும். இந்த கருங்குருவை அரிசி, பச்சை அரிசியை போன்று எளிதாக சமைக்க கூடியதல்ல. இதனை சில மணி நேரங்கள் ஊற வைத்து அதன் பின்னரே பொங்கல் வைக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு நெய் பிரச்சனை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் கருங்குருவை அரிசி பொங்கல் வைத்து உங்கள் தெய்வத்தை வணங்கி நோயிலிருந்து விடுபட வாழ்த்தி விடை பெறுகிறோம்.

- Advertisement -