தீராத நோய் தீர்க்கும் முருகன் பரிகாரம்

murugan8
- Advertisement -

இன்று வருமானமாக வரக்கூடிய பணத்திலிருந்து ஒரு பெரிய தொகையை எடுத்து மருத்துவமனைக்கு கொட்டிக் கொள்கின்றோம். காரணம் கால சூழ்நிலைக்கு ஏற்ப, உடல் ஆரோக்கியமும் மாறி வருகின்றது. உடல் ஆரோக்கிய குறைபாட்டால் வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய் படுகிறார்கள். அடிக்கடி அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வீண் விரைய செலவு செய்து மருந்து மாத்திரை சாப்பிடுகின்றோம்.

நீண்ட நாட்களாக நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தால், நீண்ட நாட்களாக தொடர்ந்து ஒரே வலியின் மூலம் அவதிப்பட்டு வருபவர்களாக இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

தீராத நோய் தீர்க்கும் முருகர் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் பரங்கிக்காய். அதாவது பூசணிக்காய் என்பது வெள்ளை கலரில் நீர் காயாக கிடைக்கும். அந்த காய் பரிகாரத்திற்கு வேண்டாம். ஆரஞ்சு கலரில் இருக்கும் பரங்கி காயை தான் இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகின்றோம். ஒரு முழு பரங்கிக்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அதை நேராக முருகன் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

இந்த பரங்கிக்காயை கையில் வைத்துக் கொண்டு முருகப் பெருமானை மூன்று முறை வளம் வாங்க. முருகப் பெருமானே என்னை பிடித்த வியாதி எல்லாம், என் உடம்பை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று பிராத்தனை வைத்துக் கொண்டு, ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு பிறகு இந்த பூசணிக்காயை தானம் செய்ய வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு ரொம்ப நாளா முட்டி வலிக்கு மருந்து சாப்பிடுறீங்கன்னா அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று கூட பிரார்த்தனை வையுங்கள் அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு வியாதி இருக்கும் அல்லவா அந்த பிரச்சனை சரியாக வேண்டுதல் வச்சிக்கோங்க அது உங்களுடைய விருப்பம். உடல்நிலை சரியாமல் வயதானவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அவர்களுடைய கையில் இந்த பரங்கிக்காயை தொட்டுக் கொடுக்கச் சொல்லுங்க.

நீங்க என் அப்பாவுக்கு, என் அப்பாவுக்கு, என் தாத்தாவுக்கு, என் பாட்டிக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு தாம்பல தட்டில் ஒரு வேட்டி துண்டு, வெற்றிலை பாக்கு, வைத்து உங்களால் முடிந்த காணிக்கையை வைத்து இந்த பரங்கிக்காயை அதில் வைத்து அந்த தாம்பூல தட்டோடு ஒரு ஏழைக்கு இந்த தானத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்கள் கர்மா விலகி நிச்சயமாக தீராத நோய் தீரும். இதனால் இந்த தானத்தை பெறுபவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வருமா. நிச்சயமாக வரவே வராது. அந்த கோவிலுக்கு வாசலில் அமர்ந்து கொண்டிருக்கும் யாசகம் கேட்பவர்களுக்கு கூட அதாவது பிச்சைக்காரர்களுக்கு கூட இந்த தானத்தை கொடுக்கலாம் தவறு கிடையாது.

ஒரு பெண் யாசகருக்கு நீங்கள் இந்த தானத்தை செய்தாலும் தவறு இல்லை. ஆனால் ஒரு ரவிக்கை துணி, புடவை துணி, வைத்து இந்த தானத்தை செய்யணும். அதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.

இதையும் படிக்கலாமே: ஏப்ரல் மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

பரிகாரத்தை செய்யும் போது உங்கள் குருவாக மகா பெரியவா அவர்களை நினைச்சுக்கோங்க. ஆமாங்க மகா பெரியவா அவர்கள் சொன்ன பரிகாரமே தான் இது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மனமகிழ்ச்சி அடைந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -