இந்த 2 எழுத்து மந்திரத்தை தினமும் இப்படிக் கூறினால் நோய் நொடி எதுவும் அண்டாது! வினைப்பயன் உங்களை நெருங்கவும் செய்யாது தெரியுமா? பட்ட கஷ்டங்கள் தீர பிரணவ மந்திரம்!

murugan-manthiram1-1
- Advertisement -

சில மந்திரங்கள் சில அதிர்வலைகளை ஏற்படுத்தி அதற்கு உரிய பலன்களையும் கிடைக்கச் செய்கின்றன. சக்தி வாய்ந்த மந்திரங்கள் சிலவற்றில் மிக முக்கியமாக இருக்கும் மந்திரங்கள் பலவும் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. மந்திரங்களின் ஓசையின் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய உடம்பின் அதிர்வலைகள் நம்மை செம்மைப்படுத்துகிறது. சரியான வழியில் செல்வதற்கான திட்டத்தை தீட்டி கொடுக்கிறது. அப்படியான மந்திரங்களில் இந்த இரண்டு எழுத்து மந்திரமும் ஒன்றாகும். பிரணவ மந்திரம் என்று கூறப்படும் இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை தினமும் உச்சரித்து வருபவர்களுக்கு வினை பயன் நெருங்காது! மேலும் நோய் நொடிகள் அண்டாது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அதை பற்றிய ஆன்மீக தகவல்களை இப்பதிவில் இனி காண்போம்.

வினைப்பயன் என்பது நாம் செய்த பாவங்களுக்கான பயனை அப்போதே அனுபவிப்பது ஆகும். செய்த வினையின் பயனை உடனே அனுபவிப்பவர்கள் ஒரு சிலர் என்றாலும், காலம் தாழ்த்தி அனுபவிப்பவர்கள் தான் இன்று ஏராளமாக நம்முள் இருக்கிறோம். அதனால் தான் ஒருவர் செய்த புண்ணியத்தின் பலனை உடனே பெற்றுக் கொண்டு, அதற்கு எதிரான பலனை கடைசி காலத்தில் சேர்த்து அனுபவிக்கிறோம். தெரியாமல் செய்த பாவ விஷயங்களுக்கான வினைப்பயனை அனுபவிக்காமல் இருக்கவும், மென்மேலும் தவறுகள் செய்யாமல் திருத்தப்படவும் சொல்ல வேண்டிய இந்த அற்புதமான மந்திரம் முருகனுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.

- Advertisement -

முருகனுக்கு உரிய ‘ஓம்’ என்னும் இந்த சக்தி வாய்ந்த 2 எழுத்து மந்திரத்தை பிரணவ மந்திரம் என்கிறோம். ஓம் என்னும் ஒலி ஓசோனிலும் ஒலிப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது போல ஓம் என்பது அடிவயிற்றில் இருந்து உச்சந்தலை வரை அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடிய ஒரு அற்புதமான எழுத்தாகவும் இருந்து வருகிறது.

இந்த எழுத்தில் இருக்கும் சக்தி, மகா சக்தியாக விளங்குகிறது. இதை உச்சரிப்பவர்களுக்கு பல விதமான சக்திகள் உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மனதை ஒருமுகப்படுத்தி தியான நிலையில் பூஜை அறையில் அமர்ந்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 108 முறை இந்த மந்திரத்தை தொடர்ந்து தடை இல்லாமல் உச்சரிக்க வேண்டும். எவ்வளவு சங்கடங்கள் நடுவில் ஏற்பட்டாலும், அதிலிருந்து பூமியை விட்டு எழுந்திருக்காமல் உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

‘ஓம்’ என்னும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் கழிகிறது. உடம்பில் இருக்கும் நோய் நொடிகள், துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும். இதனால் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் சிறிது நேரமாவது அமர்ந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நலம் தரும்.

ரொம்பவே எளிமையாக இருக்கக்கூடிய இந்த ஓம் என்பது, பிரணவ மந்திரத்தை குறிக்கிறது. இம்மந்திரம் முருகப் பெருமானுக்கு உகந்ததாக இருக்கிறது. கண்டிப்பாக முருகன் படம் வைத்திருப்பவர்கள், ஒரு சிறு படமாவது ஓம் எனும் மந்திரம் இருக்குமாறு மாட்டி இருப்பீர்கள். நீண்ட நாளாக நோய் வாய் பட்டவர்கள், நோயால் அவதிப்படுபவர்கள் இது போல பூஜை அறையில் அமைதியாக தியான நிலையில் அமர்ந்து 108 முறை ஓம் என்னும் மந்திரத்தை நிறுத்தி நிதானமாக மெதுவாக கூறி மெதுவாக மூச்சை இழுத்து விடவும். இழுத்து மூச்சை விடும் பொழுது பிரணவ சக்தி இயற்கையாக நமக்கு கிடைக்கிறது. இனி பூஜையில் இந்த பிரணவ மந்திரத்தையும் சேர்த்து உச்சரித்துப் பாருங்கள், வாழ்க்கையில் இனி வசந்த காலமே!

- Advertisement -