ஒரு துண்டு இஞ்சி இருந்தா போதும் ஒரே மாதத்தில் ஊளை சதை முழுவதையும் குறைத்து விடலாமே! இதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்?

ginger-belly-fat
- Advertisement -

மாறி வரும் உணவு முறை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளில் ஒன்று ஊளைச் சதை! உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் வெளியேற முடியாமல் உடலுக்குள்ளேயே தேங்கி விடுவதால் உடல் பருமனை அதிகரிக்க செய்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. ஒரு துண்டு இஞ்சி வீட்டில் இருந்தால் ஒரு மாதத்தில் எல்லா ஊளைச் சதையைக் குறைத்து விடலாம். அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? என்கிற சூட்சமத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

இஞ்சி சாறு உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. சாதாரண வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியில் வந்து விடும். உடல், மனம், வயிறு தொடர்பான எல்லா பிரச்சனைகளை சரி செய்ய வெதுவெதுப்பான தண்ணீர் போதுமானது தான்.

- Advertisement -

ஆனால் வெறும் சுடு தண்ணீர் மட்டும் பருகி வந்தால் போதுமா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவு ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. ஒருவர் சாதாரண வெதுவெதுப்பான தண்ணீரை சாப்பிட்டு முடித்த பின்பு அரை மணி நேரம் கழித்து மூன்று வேளையும் குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை அகற்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் ஆனால் எல்லோராலும் இதை கடைபிடித்து பயன் பெற முடியாது.

உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவு குறைவாக இருந்தால் அதற்கு கூடுதலாக நமக்கு சில விஷயங்கள் தேவைப்படும். அதில் முக்கியமான ஒரு விஷயம் உணவுக் கட்டுப்பாடு ஆகும். தண்ணீர் குடித்தால் போதும், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிற மனப்போக்கு கண்டிப்பாக இருக்கக் கூடாது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஜங்க் புட் எனப்படும் தேவையற்ற குப்பைகளை வயிற்றில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் பதார்த்தங்கள், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திரவ உணவுகள் மற்றும் சத்துள்ள, ஆரோக்கியம் நிறைந்துள்ள, கலோரி குறைவான இருக்கக்கூடிய உணவுகளை பட்டியலிட்டு சரிவிகிதமாக சாப்பிட்டு வரவேண்டும். நீங்கள் சாப்பிடும் அளவை ஒரே அடியாக குறைத்து கொண்டால் உங்கள் உடல் அதனை ஏற்காது எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவு கட்டுப்பாட்டை கடை பிடித்து வர வேண்டும். இதனுடன் எளிய உடற்பயிற்சிகளையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். ஒரு பத்து நிமிடமாவது வாக்கிங் போவது அல்லது ஜாக்கிங் செல்வது போன்றவை கடைபிடிக்கலாம்.

இதனுடன் சாப்பிட்டு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் கழித்து 300ml தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு துருவிய இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். 300 எம்எல் 200எம்எல் வரை நன்கு கொதித்து வர வேண்டும். அதன் பிறகு வடிகட்டி வெது வெதுப்பாக குடித்து விடுங்கள். காலை வெறும் வயிற்றில் ஒரு முறை, மதியம் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு ஒருமுறை, இரவில் தூங்கும் முன்பு சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு ஒருமுறை என்று 3 வேளை ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் எத்தகைய ஊளைச் சதையைக் கரைத்து எளிதாக உடம்பை திடமாக வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -