வெறும் 7 நாட்களில் ஏஞ்சல் போல அழகாக மாற வேண்டுமா? இந்த 3 பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் போட்டு தான் பாருங்களேன். பிறகு தேவதைக்கும் உங்களுக்கும் வித்தியாசமே தெரியாது.

face12
- Advertisement -

உங்களுடைய முகத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அதை ஏழு நாட்களில் சரி செய்வதற்கு உண்டான ஒரு பேஸ் பேக்கை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். எண்ணெய் வடியக்கூடிய சருமம், முகப்பரு, கரும்புள்ளிகள், கருந்துட்டுக்கள், பொலிவிழந்த கருத்துப் போன சருமம், என்று எல்லா வகையான சருமத்திற்கும் இந்த ஃபேஸ் பேக் செட் ஆகும். தொடர்ந்து ஏழு நாட்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். இடையில் ஒரு நாள் கூட விடாதீங்க. நீங்க நம்பவே முடியாத ஒரு ரிசல்ட் கண்ணாடியில் தெரியும். அதாங்க சுருக்கமா சொன்னா நீங்களும் ஏஞ்சலா மாறுவீங்க.

ஏழு நாட்களில் முகப்பொலிவை கொடுக்கும் ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய நமக்கு 3 பொருட்கள் தேவை. ஆரஞ்சு பழச்சாறு, பச்சைப்பயிறு பொடி, தேங்காய் எண்ணெய். ஆரஞ்சு பழத்தை தோலுரித்து உங்கள் கையாலேயே பிழிந்து சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சைப்பயறு பொடி – 4 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், இதை பேஸ் பேக்காக கலக்கும் அளவுக்கு தேவையான ஆரஞ்சு பழச்சாறை ஊற்றி கலந்தால் சூப்பரான ஒரு பேஸ் பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும்.

உங்களுடைய முகத்தை சுத்தமாக மேக்கப் எதுவும் இல்லாமல் கழுவி விடுங்கள். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகம் கழுத்து பகுதிகளில் போட்டு 20 நிமிடங்கள் நன்றாக காய வைத்து கொள்ளவும். ஃபேஸ் பேக் நன்றாக டிரையான பிறகு முகத்தை ஈரம் செய்து கொண்டு, வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். ஒரு நாள், இரண்டு நாள், மூன்றாவது நாள் போட்டு பார்த்துவிட்டு பேக் போடுவதை நிறுத்தாதீங்க. தொடர்ந்து ஏழு நாட்கள் மட்டும் இந்த பேக்கை ட்ரை பண்ணி வந்தால் நம்ப முடியாத மாற்றத்தை முகத்தில் நிச்சயம் உங்களால் காண முடியும்.

- Advertisement -

முகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளுக்கும் நிச்சயமாக ஒரு விடிவுகாலம் பிறக்கும். உங்களுடைய முகம் ஒரு படி வெள்ளையாக மாறி இருக்கும். அந்த பிரைட்னஸ் சொல்லுவாங்க அல்லவா. அதை நீங்களே கண்ணாடியில் பார்க்கலாம். என்னுடைய முகத்தில் பிம்பிள் இருக்கு, தேங்காய் எண்ணெய் போட்டால் செட் ஆகுமா. என்னுடைய முகம் ஆயில் ஸ்கின், தேங்காய் எண்ணெய் சேர்க்கலாமா? என்ற டவுட்டே வேணாங்க. கட்டாயம் இந்த மூன்று பொருட்களையும் ஸ்கிப் பண்ணாமல் ஏழு நாட்கள் மட்டும் ஃபேஸ் பேக்காக ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை மற்றும் முகப்பருக்கள் நீங்கி உங்க முகமும் கரடு முரடாக இல்லாமல் மென்மையாக மாற வேண்டுமா? எதுவும் யோசிக்காம இத ட்ரை பண்ணுங்க போதும்!

மிக்ஸி ஜாரில் முழு பாசிப்பயிரைப் போட்டு நன்றாக பொடி செய்து விட்டு அதை சலித்து எடுத்து நைசாக இருக்கும் பவுடரை ஃபேஸ் பேக் போட பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏழு நாட்கள் தொடர்ந்து முகத்தில் இந்த ஃபேஸ் பேக்கை போட்ட பின்பு முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறைந்த பின்பு, வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த ஃபேஸ் பேக்கை போட்டால் போதும். ஏழு நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து தினமும் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் போடாதீங்க. உங்களுடைய அழகு, அழகாக பாதுகாக்கப்படும். இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -