ஒரே நாளில் வலியே இல்லாமல் மேஜிக் போல மருக்கள் மறைய வேண்டுமா? அப்படியானால் இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

நம் உடலில் தோன்றும் இந்த மருக்கள் சாதாரணமாக தோன்றி விடாது. இது வருவதற்கு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ அல்லது வைரஸ் தொற்று தாக்கம் இருந்தாலோ நம் உடல் சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தாலும் தான் இது போன்று மருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். நம் உடலில் உப்புச் சத்து அதிகமாக இருந்தாலும் கூட இந்த மருக்கள் வரும். மருக்கள் மற்ற இடங்களில் வரும் போது நாம் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. ஆனால் முகத்தில் தோன்றி விட்டால் முக அழகையே கெடுத்து விடும். அதே நேரத்தில் இதை எடுக்க நினைத்தால் அதிக அளவு வலியையும் தரக்கூடியது. அப்படிப்பட்ட இந்த மருவையும் ஒரே நாளில் வலியில்லாமல் உதிர செய்யும் ஒரு அற்புத மருந்தை தெரிந்து கொள்ளவதற்கான பதிவு தான் இது.

இதற்கு நமக்கு தேவையான பொருட்கள்: பாதி அளவு வெங்காயம், ஐந்து பல் பூண்டு, சிறிதளவு டூத் பேஸ்ட், சமையல் சோடா, மஞ்சள் தூள், தயிர், வெற்றிலை ஒன்று.

- Advertisement -

முதலில் வெங்காயத்தையும், பூண்டையும், தோல் எடுத்து நன்றாக அலம்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் பொடியாக நறுக்கி இடி உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு இடிக்க வேண்டும். கொர கொரப்பாக இருக்கக் கூடாது நல்ல பேஸ்ட் பதத்திற்கு இடிக்க வேண்டும். மிக்ஸியிலும் இதை அரைக்கக் கூடாது.

பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இதை இன்னொரு பெலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு டூத் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளுங்கள். பிறகு இரண்டு பின்ச் சமையல் சோடா, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், இவைகளை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு ஒரு ஸ்பூன் தயிரையும் சேர்த்து நன்றாக குழைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு வெற்றிலையை எடுத்து உங்கள் மரு சிறியதோ, பெரியதோ அந்த அளவிற்கு வெற்றிலையை நறுக்கி மருக்கலின் மீது இந்த பேஸ்ட்டை தடவிய பிறகு வெற்றிலையை அதன் மேல் வைத்து மேலே ஏதாவது ஒரு டேப் ஒட்டி வைத்து விடுங்கள். இது இரவு படுக்கும் போது வைத்து விடுங்கள். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும் காலையில் எடுத்து விடுங்கள். இந்த முறையில் புதிதாக தோன்றிய சின்னச்சின்ன மருக்களாக இருந்தால் இதை வைத்த உடனே உதிர்ந்து விடும். கொஞ்சம் நாள்பட்ட மருவாக இருந்தால் இரண்டு மூன்று நாட்களில் உதிர்ந்து விடும்.

இதையும் படிக்கலாமே: நரைமுடி கருப்பாக காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த குறிப்புகளில் ஒரு சில குறிப்புகள் இதோ உங்களுக்காக.

மருக்கள் வந்து விட்டால் அதை நீக்க எவ்வளவு பாடு பட வேண்டி இருக்கும். இப்படி வழியே இல்லாமல் ஒரே நாளில் இந்த மருக்கள் நீங்கி விடும் என்றால் நல்லது தானே. இந்த குறிப்பு பிடித்திருந்தால் மரு உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -